கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட செடியன் குளம் கடந்த சில வாரங்களாக அதிரை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், கடந்த மூன்று தினங்களாக சிஎம்பி வாய்க்கால் மூலம் பெத்தான் குளம் வழியாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் ஆற்று நீராலும் நிரம்பி, ஏரி போல் காட்சியளிக்கிறது.
தற்போது அதிரையில் மிதமாக பெய்துவரும் தொடர் மழை தூறலையும் பொருட்படுத்தாது இப்பகுதியினர் குளத்தை ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். நீரின் மட்டம் இன்னும் 1 அடி உயர்ந்தால், குளம் நிரம்பி வழிந்து ஓடும் நிலையில் உள்ளது. தண்ணீர் வழங்குவதற்கு பொதுப்பணித்துறை சார்பில் ஒருவார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் குளத்திலிருந்து நீர் நிரம்பி இதன் இணைப்பில் உள்ள வாய்க்கால் வழியாக அருகில் உள்ள கீழத்தெரு செயனாங் குளத்திற்கு தண்ணீர் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுஒருபுறமிருக்க, செடியன் குளத்தின் மேட்டை சுற்றி காணப்படும் புதர்களையும், தேவையற்று வளர்ந்து காணப்படும் செடி கொடிகளையும் அப்புறப்படுத்தவும், பெண்கள் குளிக்கும் கரையை சுற்றி பிரதியோகமாக தடுப்புவேலி ஏற்படுத்தவும் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் குளத்தின் மேட்டு பகுதியில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தவும், செடியன் குளத்திலிருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருகில் உள்ள தாழ்வான பகுதியாக இருக்கும் பிலால் நகரில் புகாதவாறு முன்னேற்பாடுகளை செய்யவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போது ஏரி போல் காட்சியளிக்கும் செடியன் குளத்தின் புகை படங்கள் இதோ உங்களின் பார்வைக்கு...
அல்லாஹ் அக்பர்..
ReplyDeleteஎல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுகே...
மாஷா அல்லாஹ்
ReplyDeleteஅல்ஹம்தில்லாஹ்
ReplyDeleteகுளம் நிிறைந்ததை காணுும் போது மனம் நிறைகிறது.
அல்ஹம்துலில்லாஹ் , உழைத்த அனைவர்க்கும் அல்லா நற் கூலி கொடுக்க போதுமானவன்.....
ReplyDeleteI want swimming
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் , உழைத்த அனைவர்க்கும் அல்லா நற் கூலி கொடுக்க போதுமானவன்.....
ReplyDeleteமாஷா அல்லாஹ் !
ReplyDeleteஎல்லா குளத்தைவிடவும் செடியன் குளத்தின் தண்ணீர் மிகவும் தெளிவாவும் அழகாகவும் காட்ச்சி அழிக்கிறது இன்று காட்ச்சி அழிப்பது போல் என்றும் தண்ணீருடன் காட்ச்சியளிக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறேன்.
உழைத்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் !
லட்சங்களை அரசு அதிகாரிகள் செலவிட்டு தான் ஏப்பம் விட்ட குளங்களை விட லட்சியத்தோடு பணியாற்றிய நம் சகோதரர்களின் உழைப்பில் இன்று அருமையாக காட்சி தருகிறது, அழுக்கை அகற்றிக்கொள்ள வரும் மானிடர்கள் அசுத்தம் செய்யாமல் இருப்பது அவர்களின் கடமை.
ReplyDeleteலட்சங்களை அரசு அதிகாரிகள் செலவிட்டு தான் ஏப்பம் விட்ட குளங்களை விட லட்சியத்தோடு பணியாற்றிய நம் சகோதரர்களின் உழைப்பில் இன்று அருமையாக காட்சி தருகிறது, அழுக்கை அகற்றிக்கொள்ள வரும் மானிடர்கள் அசுத்தம் செய்யாமல் இருப்பது அவர்களின் கடமை.
ReplyDeleteசெடியன் குளத்திற்கு தண்ணீர்கொண்டு வர பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா...இப்படி செடியன் குளத்தை பளிச்சென்று தண்ணீருடன் பார்த்து ரொம்பகாலம் ஆகிவிட்டது. இந்தத் தண்ணீரை அசுத்தப்படுத்தாமல் பாதுகாக்கப் படவேண்டும்.
This comment has been removed by the author.
ReplyDeleteமாஷா அல்லாஹ் !
ReplyDeleteஎல்லா குளத்தைவிடவும் செடியன் குளத்தின் தண்ணீர் மிகவும் தெளிவாவும் அழகாகவும் காட்ச்சி அழிக்கிறது இன்று காட்ச்சி அழிப்பது போல் என்றும் தண்ணீருடன் காட்ச்சியளிக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செய்கிறேன்.
உழைத்த நல் உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள் !