அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ் நடுத்தெரு வாய்க்கால் தெருவில் உள்ள செட்டியா குளத்திற்கு தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன்படி கடந்த பல மாதங்களாக குளத்தை புனரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.
பல ஆண்டுகளாக குப்பை கழிவுகளாலும், கழிவு நீராலும் சூழப்பட்டு துர்நாற்றம் வீசி வந்த குளத்திற்கு விடிவுகாலம் பிறந்ததை கண்டு இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் குளத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை மற்றும் நேற்றும், இன்றும் பெய்துவரும் தொடர் மழைநீரோடு கழிவு நீரும் தற்போது கலந்து காணப்படுவதால் நாளடைவில் மீண்டும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடுமோ என இப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.
மழைகாலங்களில் குளத்தை சுற்றி வழிந்து ஓடும் கழிவு நீர் குளத்தினுள் கலக்காதவாறு, இக்குளத்தை சுற்றி காணப்படும் வாய்க்காலில் கழிவு நீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதும், அதேபோல் குளத்திற்கு ஆற்று நீரை நேரடியாக கொண்டு வர நிரந்தர வாய்க்கால் பாதையை ஏற்படுத்த வேண்டும் என்பதும், குளத்தை சுற்றிக்கொட்டப்படும் குப்பை கழிவுகள் குளத்தினுள் புகாதவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், ஆற்று நீரை குளத்தில் முழுவதும் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதும் இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலனோரின் கோரிக்கையாக இருக்கிறது.
களத்திலிருந்து அஜீம்
பல ஆண்டுகளாக குப்பை கழிவுகளாலும், கழிவு நீராலும் சூழப்பட்டு துர்நாற்றம் வீசி வந்த குளத்திற்கு விடிவுகாலம் பிறந்ததை கண்டு இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் குளத்தின் அனைத்து பணிகளும் நிறைவுற்ற நிலையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை மற்றும் நேற்றும், இன்றும் பெய்துவரும் தொடர் மழைநீரோடு கழிவு நீரும் தற்போது கலந்து காணப்படுவதால் நாளடைவில் மீண்டும் துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிடுமோ என இப்பகுதியினர் அச்சப்படுகின்றனர்.
மழைகாலங்களில் குளத்தை சுற்றி வழிந்து ஓடும் கழிவு நீர் குளத்தினுள் கலக்காதவாறு, இக்குளத்தை சுற்றி காணப்படும் வாய்க்காலில் கழிவு நீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பதும், அதேபோல் குளத்திற்கு ஆற்று நீரை நேரடியாக கொண்டு வர நிரந்தர வாய்க்கால் பாதையை ஏற்படுத்த வேண்டும் என்பதும், குளத்தை சுற்றிக்கொட்டப்படும் குப்பை கழிவுகள் குளத்தினுள் புகாதவாறு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும், ஆற்று நீரை குளத்தில் முழுவதும் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதும் இந்த பகுதியில் வசிக்கும் பெரும்பாலனோரின் கோரிக்கையாக இருக்கிறது.
களத்திலிருந்து அஜீம்






No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.