.

Pages

Saturday, November 29, 2014

ஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ வங்கி துவக்குகிறது !

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் நாடாளுமன்றத்தில் இந்தியாவில் வட்டியில்லாத 'இஸ்லாமிய வங்கி' சேவையை துவங்க கோரிக்கை விடுத்து இருந்தார்.

இந்நிலையில் ஷரியத் சட்டத்தின்படி மியூச்சுவல் பண்டு எஸ்.பி.ஐ வங்கி துவக்கம் குறித்து நாளிதழ் செய்தியில் வந்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது...
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்களுக்கான, மியூச்சுவல் பண்டு திட்டத்தை, முதல் முறையாக, எஸ்.பி.ஐ., வங்கி, அடுத்த மாதம் துவக்குகிறது. ஷரியத் சட்டத்தின்படி, முஸ்லிம் மக்கள், தாங்கள் செய்யும் முதலீடுகளில் இருந்து வட்டி பெறுவதோ அல்லது தருவதோ கூடாது. இதன் காரணமாக, அவர்கள், வட்டி வரும் வகையிலான முதலீடுகளை செய்வதில்லை. முஸ்லிம் நாடுகளில் உள்ள இஸ்லாமிய வங்கிகள் கூட, வட்டி தொடர்புள்ள, எந்த முதலீடுகளையும் ஊக்குவிப்பதில்லை.நாடு முழுவதும் உள்ள, 17 கோடி முஸ்லிம் மக்களின் நலன் கருதி, அவர்கள் சட்டப்படி, புதிய முதலீட்டு திட்டத்தை, அரசு வங்கியான எஸ்.பி.ஐ., துவக்குகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் ஒப்புதல் அளித்துள்ளன. எஸ்.பி.ஐ., வங்கியின், இந்த புதிய முதலீட்டு திட்டத்தில், எத்தகைய வட்டியும் இல்லை என்பதால், இதற்கு, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் ஆதரவு தெரிவித்து உள்ளது.

3 comments:

  1. வெளியே தெரியாமல் இப்படி பல சாதனை செய்துவிட்டு அமைதியாக இருப்பதால்தான் தாய் கழகம் என்கிறார்களோ. இனிமேலாவது செய்தவகைகளை வெளிபடுத்துங்கள். அரசு அங்கீகாரம் பெற்ற ஒரே இஸ்லாமியக் கட்சி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்.

    ReplyDelete
    Replies
    1. எதற்க்கும் .அரசு அங்கிகாரம் மட்டும்மள்ள நாளைய மறுமை அங்கிகாரம்மும் வேண்டும்

      Delete
  2. நாளைய மறுமை அங்கீகாரம் இல்லை என்று சொல்லும் தகுதி யாருக்கு உண்டு ? அந்த அங்கிகாரத்தை நோக்கித்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் அவர்கள் பயணிக்கின்றனர். வாழ்க அவர்கள் சேவை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.