.

Pages

Sunday, November 16, 2014

தஞ்சையில் புத்தக கண்காட்சி !

தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் 6வது ஆண்டு ரோட்டரி புத்தக திருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி வரும் 23ம் தேதி வரை மருத்துவக்கல்லூரி சாலை சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடக்கிறது. 

இதுகுறித்து கிங்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூர் கிங்ஸ் ரோட்டரி கிளப் சார்பில் 6வது ஆண்டாக புத்தக திருவிழா மருத்துவக்கல்லூரி சாலை சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் இன்று முதல் துவங்குகிறது. புத்தக திருவிழாவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விமலா துவக்கி வைக்கிறார்.

கலெக்டர் சுப்பையன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சுப்பிரமணியன், எஸ்பி தர்மராஜன், ஈரோடு ஸ்டாலின் குணசேகரன் மற்றும் பலர் பேசுகின்றனர். 15ம் தேதி நடக்கும் விழாவில் பேச்சாளர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடக்கிறது. 16ம் தேதி தேசிய விருது பெற்ற இயக்குனர் ராமசாமி பேசுகிறார். சிறந்த படைப்பாளிகள் 21 பேர் பாராட்டப்படுகின்றனர். 17ம் தேதி பேச்சாளர் நாஞ்சில் சம்பத், 18ம் தேதி திருச்சி சிவா, 19ம் தேதி திரைப்பட இயக்குனர் சுகா, 20ம் தேதி நடிகை ரோகிணி, 21ம் தேதி ஆயிஷா நடராஜன், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பேசுகின்றனர். 22ம் தேதி புதுகை பூபாலன் கலைக்குழுவினர் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. 23ம் தேதி நிறைவு விழாவில் அமைச்சர் வைத்திலிங்கம், எம்பி பரசுராமன், எம்எல்ஏ ரங்கசாமி, மேயர் சாவித்திரி மற்றும் பலர் பங்கேற்கின்றனர். புத்தக திருவிழாவில் இடம்பெறும் நூல்களுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. விழாவையொட்டி மராத்தான் ஓட்டம், மாணவர்களின் கலைநிகழ்ச்சி இடம்பெறுகின்றன என்றார். கிங்ஸ் ரோட்டரி கிளப் சாசன தலைவர் ஆசிப் அலி, திட்ட இயக்குனர் சுந்தர்நாராயணன், கிளப் செயலாளர் திருவம்பலம் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.