அதன்படி அதிரையின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகிய பேருந்து நிலையத்தின் மத்திய பகுதி, பேருந்துகள் வரும் வாயில் பகுதி ஆகியவற்றில் மூன்று கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவை அதிரை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் நேரடி கண்காணிப்பில் இருந்துவருகிறது. மேலும் அதிரையின் பிரதான வேறு சில இடங்களிலும் கூடுதலாக கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் வேண்டும் என்று காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இன்று காலை அதிரை காவல்துறை ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட இடங்களை நேரடியாக பார்வையிட்டார். அப்போது அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை, பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோரிடம் கேமிரா இயங்கும் தன்மை குறித்தும், இதனால் ஏற்படும் பயன் குறித்தும் விவரித்து கூறுகிறார்.
அருமையான செயல் வரவேற்க தக்கது இன்னும் வணிக வளாகம் மற்றும் மார்கெட் பகுதிகளிலும் வைத்தால் சிறந்தது இதன் மூலம் மார்கெட் பகுதிகளில் அடிக்கடி தீ பற்றி எறிவதை தடுக்கலாம் .
ReplyDeleteவரவேற்க தக்கது !
ReplyDeleteகாவல்துறைக்கு பாராட்டுகள்.
இதனால் நகரில் வாகன நெருக்கடியையும்- சமூக குற்றங்களை கட்டுப்படுத்த முடியும்.
மேலும் அதிரையின் முக்கிய பகுதிகளில் இன்னும் 10 கேமிராக்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு கேமிரா நிறுவ ₹ 5 ஆயிரம் செலவு ஆகும் என கூறப்படுகிறது. இவற்றை பகிர்ந்துகொள்ள எண்ணுவோர் அதிரை காவல்துறையை அணுகி வழங்கலாம். இதனால் நமதூரில் நிகழும் சமூக குற்றங்கள் வெகுவாக குறையும். மேலும் குற்றங்களை தடுக்கவும் உதவும்.
பாலியல், ஈவ் டீசிங் உள்ளிட்ட முக்கிய குற்றங்களை தடுக்க பள்ளிகள் - கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் கேமிராக்கள் நிறுவ வேண்டும்.
ReplyDeleteGood job.
ReplyDeleteகேமரா பொருத்தப்பட்ட அதன் எல்லைக்கு உட்பட்ட இடங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
ReplyDeleteYes correct
Deleteநல்ல செயல் வரவேற்க்கதக்க நடவடிக்கை - எந்நேரமும் செயபாட்டுடன் இருத்தல் அவசியம் அதேபோலே நடமாடும் கேமராவை அவ்வப்போது தேவைப்படும் இடத்தில் பொறுத்த வேண்டும் குறிப்பாக ஊர்வலங்கள், போராட்டம் நடக்கும் போது.
ReplyDeleteவரவேற்க தக்கது !
ReplyDeleteகாவல்துறைக்கு பாராட்டுகள்.
வரவேற்க்க வேண்டியவை.
ReplyDeleteகாவல்துறையின் பொறுப்பான இப்பணிக்கு பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
இப்படிக் கண்காணிப்புக் கேமராக்கள் இன்னும் பல முக்கிய இடங்களிலும் பொறுத்த வேண்டும் அத்துடன் ஊரில் நடக்கும் சம்பவங்களை அறிய கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை எந்நேரமும் கண்காணிக்க ஆப்பரேட்டர்களை நிரந்தரப்பணியில் அமர்த்தவேண்டும்.
நல்ல செய்தி வாழ்த்துக்கள் பாராட்டுகள்...
ReplyDeleteஅதிரை நீயூஸ்க்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள். ..
ReplyDeleteஅதிரை நீயூஸ்க்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள். ..
ReplyDelete