.

Pages

Sunday, November 16, 2014

ஹாஜி சாருடன் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !

நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 32 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி பணி ஆற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் ஹாஜி முஹம்மது அவர்கள் தற்போது தனியார் கல்வி நிறுவனத்தில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தனது முன்னாள் மாணவரின் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இன்று காலை அதிரைக்கு வருகை தந்தார். தகவலறிந்த இவரிடம் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பலர் ஆசிரியரை நேரடியாக சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

தம்மை சந்தித்த ஒவ்வொரு மாணவரிடமும் தற்போது பயின்று வரும் கல்வி நிலவரம் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தார். மாணவர்கள் அனைவரும் ஆசிரியருடன் ஒன்றாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த நிகழ்வை பார்வையிட்ட அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

1 comment:

  1. ஹாஜி முஹம்மது சார் அவர்களின் முதல் மாணவன் என்ற பெருமை எனக்குன்டு அவர்களுக்கு என் இனிய சலாத்தினை தெரிவிக்கவும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.