பாழடைந்து காணப்பட்ட சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த [ 13-08-2014 ] அன்று துப்புரவு பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். விரைவில் திறக்க இருப்பதை எண்ணி பொதுமக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் வளாகத்தை தூய்மை படுத்தி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது இப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் வளாகத்தை விரைந்து திறப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Saturday, November 22, 2014
அதிரையில் கட்டி முடித்து பல ஆண்டுகளாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம் !
பாழடைந்து காணப்பட்ட சுகாதார வளாகத்தை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த [ 13-08-2014 ] அன்று துப்புரவு பணியாளர்கள் தூய்மை படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்கள். விரைவில் திறக்க இருப்பதை எண்ணி பொதுமக்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்நிலையில் வளாகத்தை தூய்மை படுத்தி பல மாதங்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பது இப்பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் வளாகத்தை விரைந்து திறப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
திட்டம் அறிவித்து கொள்ளை அடிப்பவர்களே, அடிக்க துடிக்கும் அரசியல்வாதிகளே இத கொஞ்சம் பார்க்க கூடாதா? மக்கள் பணத்தால் கட்டிய கட்டிடமா இது? வெறுப்பை சுவரின் மீது காட்டியது போல சம்பந்தப்பட்டவர்கள் மீது மக்கள் காட்ட வேண்டும். நபார்டு திட்டம் நம்பிக்கை இல்லா திட்டம் போல!
ReplyDeleteபொதுமக்கள் பயன்படுத்தும் சுகாதார வளாகம் என்பது அதிரை பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருக்கவேண்டும். ஆனால் இது அவ்வாறு கட்டப்படவில்லை. அப்போதைய பேரூராட்சி தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க அந்தப் பகுதியின் பொது மக்களின் தேவைக்காக பேரூராட்சி இந்த வளாகத்தை கட்டிக்கொடுத்தது. தலைவர் மாறியவுடன் அந்த கட்டிடத்தை இடித்தும், அதில் இருந்த மோட்டாரையும் எடுத்த்துச்சென்றனர். இந்த வேலைக்கு பேரூராட்சி எப்படி பொருப்பாகமுடியும். மேலும், அந்த இடத்தை பேரூராட்சிக்கு சொந்தமான இடமாக ஒப்படைத்தாலும் நாம் மேற்கொண்ட பணிகளை தொடற முயற்சி செய்யலாம். தனி மனிதர் ஒருவர் அந்த இடத்தை சொந்தமாக வைத்திருக்கும் நிலையில் அவர்தான் அதை பராமரிக்க வேண்டும். இந்த வளாகத்தை செப்பனிடும் வகையில் பேரூராட்சி பல லட்ச ரூபாயை செலவு செய்ய வேண்டும். இந்தப்பகுதியின் ஜமாஅத்தார்கள் ஒன்றுசேர்ந்து இந்நிலையை நன்கு பரிசீலித்து பேரூராட்சியில் கலந்து விவாதித்தால் இந்த தேவைக்கு ஒரு தீர்வு காணலாம். பெருந்தலைவர், அதிரை பேரூராட்சி.
ReplyDelete