.

Pages

Friday, November 28, 2014

அதிரையில் கனமழையால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை !

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இலங்கையை ஒட்டி நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் படிபடியாக மழை அதிகரிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் அதிக மழை இருக்கும் என்று வானிலை மைய தகவல் தெரிவித்தது.

இந்நிலையில் அதிரையில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு தூறல் மழை பெய்தது. குளிர்ந்த காற்றும் வீசி வந்தது. வானம் மேகங்களால் சூழ்ந்து காணப்பட்டன. நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழை தொடர்ந்து நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன மழையால் அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வில்லை.

1 comment:

  1. From 3.00 AM still now (8.00Am) heavy raining Alhamthulillah .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.