.

Pages

Saturday, November 15, 2014

அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர பிராசாரம் !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் மாநிலம் முழுவதும் அக்டோபர்-15 முதல் நவம்பர்-15 வரை "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்" நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளையின் சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம், புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவை கல்லூரி மாணவ மாணவிகள் - மத நல்லிணக்கத்தை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை அதிரை பேருந்து நிலையத்தின் அருகே தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி, மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பிரச்சார இயக்கத்தின் நிறைவாக வரும் நவம்பர் 16 ஞாயிறு அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் தஞ்சை மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. உண்மையாளர்கள் பக்கமே வல்ல இறைவன் துணை நிற்பான், அல்ஹம்துலில்லாஹ் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.