இதன் ஒரு பகுதியாக தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் அதிரை கிளையின் சார்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகம், புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன், மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இவை கல்லூரி மாணவ மாணவிகள் - மத நல்லிணக்கத்தை விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று மாலை அதிரை பேருந்து நிலையத்தின் அருகே தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி, மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பிரச்சார இயக்கத்தின் நிறைவாக வரும் நவம்பர் 16 ஞாயிறு அன்று தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் தஞ்சை மற்றும் பேராவூரணி ஆகிய பகுதிகளில் மாபெரும் மனித சங்கிலி அணிவகுப்பு நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
உண்மையாளர்கள் பக்கமே வல்ல இறைவன் துணை நிற்பான், அல்ஹம்துலில்லாஹ் .
ReplyDelete