ஏன் இல்லை ? வரலாற்றுகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடைமடைப் பகுதியான அதிரை பண்டைய கால வணிக வியாபாரத்தில் சிறந்து விளங்கியுள்ளது. பெரும்பாலான வணிகர்கள் தங்களுடைய வியாபாரமாக விவசாயப் பொருட்டுகளையும், கடல் சார்ந்த பொருட்களையும் ஏற்றுமதி செய்து வந்தனர் - வருகின்றனர். அதுமட்டுமா ! தமிழகத்தில் உப்பு அதிகமாக உற்பத்தி செய்யக் கூடிய ஊர்களில் அதிரையும் ஒன்று என்பது கூடுதல் சிறப்பாகவே கருதப்பட்டு வருகிறது.
இவ்வூரில் கஸ்டம்ஸ் அலுவலகம், வானொலி நிலையம், துறைமுகம், நூலகம், தமிழக அளவில் புகழ்பெற்ற கல்லூரி, தொழிற்பயிற்சிக் கூடங்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், இரயில் நிலையம், தபால் நிலையம், காவல் நிலையம், வானிலை ஆராய்ச்சி நிலையம், கடலோரப் காவல் படை அலுவலகம், எரிபொருள் விற்பனை நிலையங்கள், சார்பதிவாளர் அலுவலகம், துணை மின் நிலையம், அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகள், மத்திய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டுத் தளங்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்டவை அடங்கும். மேலும் இப்பகுதியை சுற்றி மகிழங்கோட்டை, தொக்காளிக்காடு, ராஜாமடம், புதுப்பட்டினம், மல்லிபட்டினம், ஆண்டிக்காடு, கொள்ளுக்காடு, மருதங்க வயல், கூடலிவயல், ஏரிபுறக்கரை, கீழத்தோட்டம், பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, முடிச்சிக்காடு, மஞ்சவயல், நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை உள்ளடங்கிய கிராமங்களில் சுமார் மூன்று லட்சம் வரை மக்கள் தொகையை கொண்ட பரந்து விரிந்த பகுதியாக காணப்படுகின்றன.
இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற பகுதியில் ‘தாலுகா அலுவலகம்’ இல்லாதது பெறும் குறையாக இருந்து வருகிறது. அதிரையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் ஒருவர் தாங்கள் வசிக்கும் இருப்பிடத்திலிருந்து தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் குறைந்தது ஒரு ஆட்டோ அல்லது இரண்டு பஸ்கள் மாறி சுமார் 15 - 20 கி.மீ., தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. அதிரைக்கே இந்த கதி என்றால் அதிரையின் பகுதியை சுற்றியிருக்கும் கிராமங்களில் வசிக்கக் கூடியவர்களின் நிலை என்னவாக இருக்கும் !?
சாதி [ !? ], வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றுகள் பெறவும், பட்டா மாறுதல், ரேஷன் கார்டு தொடர்பான குறைகளுக்கும், நலத்திட்ட உதவிகள் பெறவும், நிலத்தை அளவீடு செய்வதற்கும் தொலை தூரத்தில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருக்கிறது. அத்தோடு அங்கு மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டு விடுகிறது.
தாலுகா அலுவலக வாசலில் டோக்கன் பெறுவதற்காக காத்திருந்து வரிசையில் நிற்க வேண்டும். அந்த டோக்கனில் குறிப்பிடப்படும் நாட்களில்தான் அங்கே நாம் செல்ல வேண்டும். அதன்படி செல்கின்ற அன்றைய தினமும் நாள் முழுக்க காத்திருந்த பிறகே சான்று பெற முடியும்.
நீண்ட தூரத்தை கருத்தில் கொண்டு வேலை செல்லும் பொதுமக்களும், வயோதியர்களும், கல்லூரி, பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகளும் சான்று பெறுவதற்காக தாங்கள் பணி புரிகின்ற நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டே தாலுகா அலுவலகத்துக்குச் செல்கின்றனர். இந்த பணிக்காக சிலர் இடைத்தரகர்களிடம் தங்களின் பணத்தை இழப்பதும் உண்டு.
இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும். இதற்காக அதிரையில் கடந்த 1981 ஆம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேலத்தெருவில் புதிதாக கட்டப்பட்டிருந்த நீர் தேக்க தொட்டியிணை திறந்து வைப்பதற்காக காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அதிரை பேரூருக்கு வருகை தந்தபோது, தனது சொற்பொழிவின் இடையே, விரைவில் அதிரையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகாவாக மாற்றப்படும் என மாபெரும் கூட்டத்தில் எதிரே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பகிரங்கமாகவே அறிவித்தார். அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களும் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையான தாலுகா அலுவலகம் விரைவில் நம் பகுதியில் வர இருப்பதை எண்ணி மகிழ்ந்ததோடு மட்டுமல்லாமல் நீண்ட கரஒலியை எழுப்பி அவருக்கு நன்றியும் தெரிவித்தனர்.
அறிவிப்பு செய்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டன...
எண்ணற்ற அரசியல் மாற்றங்கள்,
புதிய கட்சிகள்,
புதிய இயக்கங்கள்,
சமூக அமைப்புகள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்
என உருவாகி இருந்தாலும் அதிரை அதிரையாகவே இருக்கிறது அதன் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கியே [ மெய்யாலுமே பஸ்டாண்டு இல்லிங்க :) ] காணப்படுகின்றன.
எம்.ஜி.ஆர் அவர்களின் 'தாலுகா கனவு' அதிரையில் நனவாகுமா !?
அனைவரும் சிந்திக்கும்படியான தலையங்கம். அனைத்துத் தகுதியும் அதிரைக்கு இருந்தும் எம் ஜி ஆர் அவர்களின் கனவு ஏன் பகல்கனவு போல படுத்துக் கிடக்கிறது..? இத்தனை அரசியல் தலைவர்களும் சமூக சிந்தனையாளர்கள் வசதி படைத்தவர்கள் இருந்தும் ஏன் முயற்ச்சிக்கவில்லை. இதில் ஏதோ சுயநலம் உள்ளது போல் தெரிகிறது.
ReplyDeleteஅனைவரும் சிந்திக்கும்படியான தலையங்கம். அனைத்துத் தகுதியும் அதிரைக்கு இருந்தும் எம் ஜி ஆர் அவர்களின் கனவு ஏன் பகல்கனவு போல படுத்துக் கிடக்கிறது..? இத்தனை அரசியல் தலைவர்களும் சமூக சிந்தனையாளர்கள் வசதி படைத்தவர்கள் இருந்தும் ஏன் முயற்ச்சிக்கவில்லை. இதில் ஏதோ சுயநலம் உள்ளது போல் தெரிகிறது.
ReplyDeleteபொதுவாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊர்களைத் தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைவதை எந்த அரசானாலும் அலட்சியப் படுத்தியே வருவது வழக்கமாக இருக்கிறது.
ReplyDeleteநீண்ட போராட்டத்துக்குப் பிறகு அண்மையில் கீழக்கரை தாலுகாவாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முத்துப் பேட்டையும் தாலுகாவாக அறிவிக்கப்படுமென்று கருனாநிதி அவர்களின் ஆட்சிகாலத்தில் அறிவிக்கப்பட்ட காரணத்தால் இன்றுவரை கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.
எம்ஜியார் வழியைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் இந்த ஆட்சி , குறைந்தபட்சம் அவரது வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
அதே நேரம்
உள்ளூரில் இயங்கும் மற்றும் இயங்காத இயக்கங்களும் ஒன்றிணைந்து இவை போன்ற பொதுப் பிரச்னைகளில் அரசின் கவனத்தைக் கவரும் வகையில் ஜனநாயக வழியில் போராட்டங்களை நடத்த வேண்டும்.
கம்பனுக்காக போராட்டம் நடத்திக் களைத்துப் போய்விட்ட நிலையில் தாலுக்காவுக்காகவும் போராட்டம் நடத்தி சற்று தளர்ந்து போய்த்தான் பார்ப்போமே!
அஸ்ஸலாமு அழைக்கும் ,12 கி மீ .தூரத்தில் பட்டுக்கோட்டை உள்ளது சுமார் 20 கி.மீ., தூரம் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. என பொய்யான தகவல் கொடுத்து இருக்கிறீர்கள் உங்கள் ஊரின் கிழக்கே கடல் மேற்கே 14 கீ மீ ,முத்துபேட்டை ,வடக்கே பட்டுக்கோட்டை ,தெற்கே 12 கீ.மீ மல்லிபட்டினம் , 20 கி.மீ., தூரம் எந்த தாலுக்கா என்பதை தயவு செய்து விளக்கவேண்டும் ,கேப்பது பெரிதாக கேட்கவேண்டும் ,அதிரையை மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்று ,நீங்கள் 65கி மீ போனால் தஞ்சை செல்லமுடியும் தமிழகத்தில் 35 கி மீ க்கு ஒரு மாவட்டம் அமைக்கும்போது 65 கி மீ உள்ள அதிரையை ஏன் மாவட்டமாக்க கூடாது ?உதரணமாக ..தருமபுரி -கிருஷ்ணகிரி ,அரியலூர் -பெரம்பலூர் இப்படி நிறைய சொல்லலாம் முயற்சி செய்யவும்
ReplyDeleteவலைக்கும் முஸ்ஸலாம்,
Deleteஅன்புச்சகோதரர் சாகுல் ஹமீது
சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி. அதிரைக்கு மாத்திரமல்ல அதிரையை சுற்றிக்காணபப்டும் கிராமப்பகுதிகளையும் கணக்கில் கொண்டே தலையங்கம் தீட்டப்பட்டது. உதாரணத்திற்கு அதிரையை அடுத்துள்ள கீழத்தோட்டம் - கொள்ளுக்காடு - ஆண்டிக்காடு உள்ளிட்ட கிராம பகுதியிலில் வசிக்கும் ஒருவர் தாலுகா அலுவலகம் செல்ல வேண்டும் என்றால் ஏறக்குறைய 20 கிலோ மீட்டர் தொலை தூரம் கடக்க வேண்டும்.
எனினும் தொலை தூர அளவு குறித்து தலையங்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதிரை தாலுக்க அவசியம் வேண்டும்.
ReplyDeleteஅதிரையர் அனைவரும் விரும்பும் ஒன்றுதான்.
அரசும் விரும்பிட வேண்டும்.
அரசு அவ்வளவு எளிதாக விரும்பிவிடாது.
அரசை விரும்பும்படி அமைக்க வேண்டும்.
மக்கள் திலகம் மறைந்துவிட்டார்.
அதனால் அவரின் விருப்பம், வாக்குறுதி காப்பற்ற மறுப்பதும், மறப்பதும் இயற்க்கை.
அரசின் கவனத்தை அடிக்கடி ஈர்ப்பதை அவசியம் செய்யவேண்டும்.
அதிரை அரசியல்கள் தனித்தோ அல்லது ஒருங்கினைந்தோ "அதிரை தாலுக்க"ப்பற்றி அடிக்கடி முழங்க வேண்டும்.
பல முனைகளில் நம் விருப்பங்கள் பல நிலையிலும் அரசுக்கும், அரசியல் வாதிகளுக்கும் அடிக்கடி நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
பலமுனை போராட்டத்தில் வெற்றி கிடைத்துவிடலாம்.
செயல்பாட்டின் ஆழ நீளத்தில் அது விரைவாக நடக்கலாம்.
இதற்கெல்லாம் அடிப்படையாக நாம் ஒவ்வொருவரும் ஆதிரைத் தாலுக்க அமைவதை நம்பவேண்டும்.
ஆனாலும் அதிரை ஏன் இன்னும் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாக மற்ற முயற்சிக்கவில்லை ?