அல்கோபர் : இந்தியன் சோஷியல் ஃபோரம்(ISF) கிழக்கு மாகாண நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி 15.11.14 சனிக்கிழமையன்று இரவு 8.30 மணிக்கு அல்கோபார் ரஃபா மெடிக்கல் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.தேசிய தலைவர் கர்நாடகாவை சேர்ந்த வசீம் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய SDPI தேசிய தலைவர் சயீத் சாஹிப் தமது உரையின் போது தலைநகர் டெல்லியிலேயே குழந்தைகள் தங்களின் கடும் பசியால் கோழியின் கழிவுகளான அதன் கால்களை பச்சையாக உண்ணும் கொடுமையை டெல்லி SDPI அலுவலகம் செல்லும் போது காணமுடிகிறது.
இத்தகைய அவல நிலைகளுக்கு தீர்வு காணாமல் தூய்மை இந்தியா என்ற மோடியின் திட்டத்தால் பாமர மக்களுக்கு பயனேதுமில்லை என்றார்.
SDPIயின் பசியிலிருந்தும் விடுதலை,பயத்திலிருந்தும் விடுதலை என்னும் சுலோகம் எப்போது ஆட்சி அதிகாரத்தின் மூலம் உயிரோட்டம் பெறுகிறதோ?அன்று தான் நமது தேசம் வல்லரசாகவும் நல்லரசாகவும் திகழ முடியும் என்றார்.
ISF கிழக்கு மாகாண தேசிய பொதுசெயலாளர் நசீர் சாஹிப் நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கூட்டத்தில் ISF கிழக்கு மாகாண தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,தமிழ் மாநில துணைத்தலைவர் மக்தூம் நைனா,பொதுசெயலாளர் திப்பு சுல்தான்,கேரள மாநில தலைவர் பாரூக் முகம்மது,கர்நாடகா மாநில தலைவர் முகம்மது சரீப்,மற்றும் அல்ஜுபைல்,அல்ஹஸ்ஸா,சிஹாத்,கோபார்,தம்மாம்,குத்ரியா உள்ளிட்ட கிளைகளின் உயர்மட்ட நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சவூதி வாழ் காயல்பட்டிணம் பொதுமக்களின் சார்பில் தேசிய தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டுவரும் டி.சி.டபுள்யூ கெமிக்கல் ஆலை வெளியேற்றும் கழிவுகளால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறுமுகநேரி, பேயன்விளை மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் மக்கள் புற்றுநோய் உட்பட கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியிலுள்ள மீன்வளம், உப்பள தொழில் முற்றிலும் நசிந்து வருகிறது.
இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஆலை நிர்வாகம் மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளது. நிபுணர் குழுவை கொண்டு ஆலையின் கழிவு வெளியேற்றும் தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உள்ளூர் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை வைத்தது. ஆனாலும் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
ஆகவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர SDPI தேசிய அளவில் குரல் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று கேட்டு கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய SDPI தேசிய தலைவர் சயீத் சாஹிப் தமது உரையின் போது தலைநகர் டெல்லியிலேயே குழந்தைகள் தங்களின் கடும் பசியால் கோழியின் கழிவுகளான அதன் கால்களை பச்சையாக உண்ணும் கொடுமையை டெல்லி SDPI அலுவலகம் செல்லும் போது காணமுடிகிறது.
இத்தகைய அவல நிலைகளுக்கு தீர்வு காணாமல் தூய்மை இந்தியா என்ற மோடியின் திட்டத்தால் பாமர மக்களுக்கு பயனேதுமில்லை என்றார்.
SDPIயின் பசியிலிருந்தும் விடுதலை,பயத்திலிருந்தும் விடுதலை என்னும் சுலோகம் எப்போது ஆட்சி அதிகாரத்தின் மூலம் உயிரோட்டம் பெறுகிறதோ?அன்று தான் நமது தேசம் வல்லரசாகவும் நல்லரசாகவும் திகழ முடியும் என்றார்.
ISF கிழக்கு மாகாண தேசிய பொதுசெயலாளர் நசீர் சாஹிப் நன்றியுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
கூட்டத்தில் ISF கிழக்கு மாகாண தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி,தமிழ் மாநில துணைத்தலைவர் மக்தூம் நைனா,பொதுசெயலாளர் திப்பு சுல்தான்,கேரள மாநில தலைவர் பாரூக் முகம்மது,கர்நாடகா மாநில தலைவர் முகம்மது சரீப்,மற்றும் அல்ஜுபைல்,அல்ஹஸ்ஸா,சிஹாத்,கோபார்,தம்மாம்,குத்ரியா உள்ளிட்ட கிளைகளின் உயர்மட்ட நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சவூதி வாழ் காயல்பட்டிணம் பொதுமக்களின் சார்பில் தேசிய தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டுவரும் டி.சி.டபுள்யூ கெமிக்கல் ஆலை வெளியேற்றும் கழிவுகளால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறுமுகநேரி, பேயன்விளை மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் மக்கள் புற்றுநோய் உட்பட கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியிலுள்ள மீன்வளம், உப்பள தொழில் முற்றிலும் நசிந்து வருகிறது.
இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஆலை நிர்வாகம் மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளது. நிபுணர் குழுவை கொண்டு ஆலையின் கழிவு வெளியேற்றும் தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உள்ளூர் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை வைத்தது. ஆனாலும் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
ஆகவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர SDPI தேசிய அளவில் குரல் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென்று கேட்டு கொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.