.

Pages

Saturday, November 1, 2014

செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு TNTJ அதிரை கிளையினர் பேரூராட்சியிடம் கோரிக்கை !

அதிரையின் பொக்கிஷங்களில் ஒன்று செடியன் குளம். மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்பு மிக்கது. அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நீராடி மகிழ்ந்து வர உதவியாக இருந்துள்ளது. மேலும் ஆடு மாடுகள், பறவைகள் நீர் அருந்தி செல்வதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பயன்தரக்கூடியதாகவும், நீர் ஆதாரத்தை இந்தப்பகுதிகளுக்கு வாரி வழங்கக்கூடியதாகவும் இருந்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடும் பலருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

இந்நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை ஆகியோரை பேரூராட்சி அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி, கிளை பொறுப்பாளர்கள் பீர் முஹம்மது, SP பக்கீர் முஹம்மது, M.I. அப்துல் ஜப்பார், AKS நவாஸ், MKM ஜமால் முஹம்மது, சிக்கந்தர், சேக்தாவூது, ராஜிக் ஆகியோர் சென்றனர்.

கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...



களத்திலிருந்து நூவன்னா

2 comments:

  1. அம்மா படம் அகற்ற வில்லை

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரையர்களாலும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களாலும் மறக்கமுடியாத ‎குளம் என்றால் அது செடியன் குளமாகத்தான் இருக்க முடியும். அந்த ‎அளவுக்கு எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்த குளம் இந்த செடியன் ‎குளம்.‎

    அன்று இந்த குளத்திற்கு இரண்டுக்கு மேற்பட்ட வாய்கள் இருந்தன, அந்த ‎வாய்கள் மூலம் இந்தக் குளம் தன பசியை நிரப்பிக் கொண்டு இருந்தது.‎

    இன்று இந்த குளத்தின் வாய்கள் அனைத்தும் சில அதிமேதாவிகளினால் ‎ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இதன் காரணத்தினால் இந்த குளம் தன் பசியை ‎நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றது.‎

    ஆகவே, சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அறுவை சிகிச்சை மூலம் இந்த ‎செடியன் குளத்திற்கு வாய்களை உண்டாக்கி நீர் நிரப்புமாறு கேட்டுக் ‎கொள்கிறேன். ‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.