கடந்த இரண்டு வருடங்களாக நீரின்றி வறண்டு காணப்பட்ட இந்த குளத்தால் இந்த பகுதியின் நீர்மட்டம் கீழே இறங்கியதோடு மட்டுமல்லாமல் இக்குளத்தில் நீராடும் பலருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இந்நிலையில் செடியன் குளத்திற்கு தண்ணீர் கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளையின் சார்பில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணை தலைவர் பிச்சை ஆகியோரை பேரூராட்சி அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பிராசாரகர் அன்வர் அலி, கிளை பொறுப்பாளர்கள் பீர் முஹம்மது, SP பக்கீர் முஹம்மது, M.I. அப்துல் ஜப்பார், AKS நவாஸ், MKM ஜமால் முஹம்மது, சிக்கந்தர், சேக்தாவூது, ராஜிக் ஆகியோர் சென்றனர்.
கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது...
களத்திலிருந்து நூவன்னா
அம்மா படம் அகற்ற வில்லை
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அதிரையர்களாலும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களாலும் மறக்கமுடியாத குளம் என்றால் அது செடியன் குளமாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்த குளம் இந்த செடியன் குளம்.
அன்று இந்த குளத்திற்கு இரண்டுக்கு மேற்பட்ட வாய்கள் இருந்தன, அந்த வாய்கள் மூலம் இந்தக் குளம் தன பசியை நிரப்பிக் கொண்டு இருந்தது.
இன்று இந்த குளத்தின் வாய்கள் அனைத்தும் சில அதிமேதாவிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. இதன் காரணத்தினால் இந்த குளம் தன் பசியை நிரப்பிக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றது.
ஆகவே, சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அறுவை சிகிச்சை மூலம் இந்த செடியன் குளத்திற்கு வாய்களை உண்டாக்கி நீர் நிரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com