தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் கடந்த அக்டோபர்-15 முதல் நவம்பர்-15 வரை மாநிலம் முழுவதும், 'தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம்' என்ற இயக்கம் நடைபெற்றது.நிறைவு நாளான நவம்பர்-16 ஞாயிறு அன்று தஞ்சை நகரம் மற்றும் பேராவூரணியில் மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
பேராவூரணி அண்ணாசிலை அருகில் இருந்து பட்டுக்கோட்டை சாலை வரை இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கரம் கோர்த்தவாறு மனிதசங்கிலியாக அணிவகுத்து நின்றனர். பேரணிக்கு மாவட்ட தலைவர் சம்பை சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சேக்தாவூது, மாவட்ட துணைச்செயலாளர் அதிரை ராஜிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "நாடெங்கும் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் இஸ்லாத்தை தொடர்பு படுத்துகின்றனர். இஸ்லாம் வன்முறையை அறவே வெறுக்கிறது. இஸ்லாம் அணு அளவு கூட வன்முறையையும், தீவரவாதத்தையும் ஆதரிப்பதில்லை. இதனை எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மாற்று மத சகோதரர்களுக்கும், ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்தவே கடந்த ஒரு மாதகாலமாக இந்த பிரச்சார இயக்கத்தை நடத்தினோம்" என்றார்.
மாவட்ட பேச்சாளர் புதுப்பட்டிணம் ஹக்கீம், நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், அலிமுகமது, சாதிக் அலி, பாவா, ஆவணம் ரியாஸ்தீன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி பேரணியில் இருநூறு பெண்கள், குழந்தைகள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
களத்திலிருந்து எஸ். ஜகுபர்அலி,
பேராவூரணி
பேராவூரணி அண்ணாசிலை அருகில் இருந்து பட்டுக்கோட்டை சாலை வரை இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கரம் கோர்த்தவாறு மனிதசங்கிலியாக அணிவகுத்து நின்றனர். பேரணிக்கு மாவட்ட தலைவர் சம்பை சாதிக் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சேக்தாவூது, மாவட்ட துணைச்செயலாளர் அதிரை ராஜிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், "நாடெங்கும் நடைபெறும் வன்முறை சம்பவங்களில் இஸ்லாத்தை தொடர்பு படுத்துகின்றனர். இஸ்லாம் வன்முறையை அறவே வெறுக்கிறது. இஸ்லாம் அணு அளவு கூட வன்முறையையும், தீவரவாதத்தையும் ஆதரிப்பதில்லை. இதனை எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மாற்று மத சகோதரர்களுக்கும், ஊடகங்களுக்கும் தெளிவுபடுத்தவே கடந்த ஒரு மாதகாலமாக இந்த பிரச்சார இயக்கத்தை நடத்தினோம்" என்றார்.
மாவட்ட பேச்சாளர் புதுப்பட்டிணம் ஹக்கீம், நிர்வாகிகள் ஜெயினுலாபுதீன், அலிமுகமது, சாதிக் அலி, பாவா, ஆவணம் ரியாஸ்தீன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி பேரணியில் இருநூறு பெண்கள், குழந்தைகள் உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேராவூரணி காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
களத்திலிருந்து எஸ். ஜகுபர்அலி,
பேராவூரணி
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.