மேலத்தெரு குட்டி மாமா கடை அருகே அமைந்துள்ள நசுருதீன் கோழிக் கடையில் விற்பனை செய்துவரும் கடை உரிமையாளர் 'சின்னவன்' என்கிற சேக் நசுருதீனிடம் நம்மிடம் கூறுகையில்...
"அதிரையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி ₹ 160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. எங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற நோக்கில் முயற்சித்து வருகின்றோம். மேலும் நாங்கள் கோழிப்பண்ணைகளுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருவதால் பொதுமக்களுக்கு எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகின்றது.
இன்று காலை துவங்கிய விற்பனையில் அதிரையின் பல்வேறு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து கோழி இறைச்சியை மனநிறைவோடு வாங்கிச் செல்கின்றனர். பண்ணையிலிருந்து ஆரோக்கியமான கோழிகளை நேரடியாக கொள்முதல் செய்து அவற்றை மக்கள் பார்வையில் படும்படி காற்றோட்டமான பகுதியில் மேய விட்டுள்ளோம். ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கிறோம்." என்கிறார்.
டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து கொடுக்கின்றனர். நாமும் நமது பங்குக்கு இரண்டு கிலோ கோழி இறைச்சியை ஆர்டர் செய்துவிட்டு, அந்த இளைஞரின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.










கோழிகறி கடை காரரே ஏதும் சீக்கு வராமல் பார்த்து கொள்ளுங்கள் .அல்லா உங்கள் தொழிலில் பரகத் செய்வான்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
கோழிக்கறியை சில பேர் சாப்பிடுவாங்க, பல பேர் சாப்பிடமாட்டாங்க. ஆனா,எல்லோரும் விரும்பும் தங்கம் ஒரு கிராம் ஒரு ரூபாய்க்கு விற்க வரும் நாள் என்னாலோ???!!
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com