.

Pages

Sunday, January 4, 2015

அதிரையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயம் !

அதிரை அடுத்துள்ள முடிசிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷன் ( வயது 40 ). அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் வைரக்கன்னு ( வயது 60 ), இவர்கள் இருவரும் இன்று இருசக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டையிலிருந்து அதிரையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வாகனம் ஷிஃபா மருத்துவமனை அருகே வந்த போது எதிரே வேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் விபத்தானது.

உடனே அப்குதியினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதில் முருகேஷனுக்கு தலையில் பலத்த காயமும், வைரக்கன்னுக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சேதமடைந்த இரண்டு வாகனங்களும் காவல்நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

அதிவேகமும், வண்டிப்பேட்டையிலிருந்து ஷிஃபா மருத்துவமனை வரையிலான சாலை முழுவதும் பழுதடைந்து காணப்படுவதே விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தி மற்றும் படங்கள்:
இப்ராஹீம் அலி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.