மிஷ்கின் பள்ளி நிர்வாக பராமாரிப்பில் இருந்து வரும் இந்த குளத்திற்கு இப்பகுதியின் குடியிருப்பிலிருந்து வெளிவரும் கழிவு நீர் வந்தடையும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிரை சுற்று வட்டாரப்பகுதியில் பெய்த தொடர் மழையால் தண்ணீர் இந்த குளத்திற்கு போதுமான அளவில் வந்தடைந்தது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து குளத்தில் காணப்படும் தண்ணீர் கண்ணில் தெரியாத அளவில் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்து இருந்தும் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் இதன் நிலைமை இருப்பதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இந்த பகுதியின் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து குளத்தில் சூழ்ந்து காணப்படும் ஆகாயத்தாமரையை முழுவதும் அகற்றி விட்டு, ஆற்று நீரை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை காலத்தில் எந்த குளத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும் இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும் காரணம் சுற்றிஉல்ல பகுதிலிருந்து வரும் கழிவு நீர் இந்த குளத்திற்கு வந்தடைகிறது இதனை தடுத்தால் ஆகாயத் தாமரை கோடையில் பட்டு விடும்.
ReplyDelete