.

Pages

Sunday, January 4, 2015

புதுத்தெரு மிஷ்கின் பள்ளி குளத்தில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றிவிட்டு ஆற்று நீரை நிரப்ப பொதுமக்கள் கோரிக்கை !

அதிரை புதுத்தெரு பகுதியில் அமைந்துள்ள மிஷ்கின் பள்ளி குளத்தில் சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையை முழுவதும் அகற்றிவிட்டு ஆற்று நீரை நிரப்பும் முயற்சியில் ஆர்வலர்கள் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மிஷ்கின் பள்ளி நிர்வாக பராமாரிப்பில் இருந்து வரும் இந்த குளத்திற்கு இப்பகுதியின் குடியிருப்பிலிருந்து வெளிவரும் கழிவு நீர் வந்தடையும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிரை சுற்று வட்டாரப்பகுதியில் பெய்த தொடர் மழையால் தண்ணீர் இந்த குளத்திற்கு போதுமான அளவில் வந்தடைந்தது. குளம் முழுவதும் ஆகாயத்தாமரைகள் படர்ந்து குளத்தில் காணப்படும் தண்ணீர் கண்ணில் தெரியாத அளவில் சூழ்ந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் அமைந்து இருந்தும் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் இதன் நிலைமை இருப்பதாக பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

இந்த பகுதியின் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து குளத்தில் சூழ்ந்து காணப்படும் ஆகாயத்தாமரையை முழுவதும் அகற்றி விட்டு, ஆற்று நீரை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. கோடை காலத்தில் எந்த குளத்தில் தண்ணீர் இல்லாவிட்டாலும் இந்த குளத்தில் தண்ணீர் இருக்கும் காரணம் சுற்றிஉல்ல பகுதிலிருந்து வரும் கழிவு நீர் இந்த குளத்திற்கு வந்தடைகிறது இதனை தடுத்தால் ஆகாயத் தாமரை கோடையில் பட்டு விடும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.