சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவே இன்று வழிப்பாட்டு தளம் மீது பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கைக்கோர்த்து தாக்கி ஒத்திகை நடத்தி உள்ளனர். எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில செயலாளர் அப்துல் சத்தார் குற்றச்சாட்டியுள்ளார்.
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவாகோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் தர்கா மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்;டது. அதனை நேற்று சோசியல் டெமாக்ராடிக் பார்டி ஆப் இந்தியா கட்சியின்(எஸ்.டி.பி.ஐ) மாநில செயலாளர் அப்துல் சத்தார் பார்வையிட்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:
நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு ஓர் இளைஞர் கூட்டம், முத்துப்பேட்டைக்குள் புகுந்து மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இங்கிருக்கூடிய வழிப்பாட்டு தளத்தை சேதமாக்கி, அதன் மதில் சுவரை இடித்து அருகாமையில் உள்ள குடிசைகளையும் பிரித்து எரிந்து, அப்பாவி மக்களை அச்சுருத்தி ஒரு சிறுவர் என்று கூட பார்க்காமல் ஹலீல் ரஹ்மானை தாக்கி விட்டு சென்று இருக்கின்றார்கள். இது எதார்ச்சையாக நடந்த செயல் என்று நாம் எடுத்துக் கொள்ளமுடியாது. இது காலம் தொட்டு நடந்து வந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலே ஒரு திட்டமிட்ட செயல். ஒரு மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இது ஒரு ஒத்திகை என்று தான் அறிய வேண்டும். வழிப்பாட்டு தளத்தின் மேல் ஏரி அதன் விளக்குகளை தைரியமாக உடைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த தர்காவின் பக்கத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என பிரச்சனை செய்தனர். பின்னர் இதே பகுதியில் ஒரு சூழாயுதத்தை புதைத்து வைத்து இது கோவில் பகுதி என்ற பிரச்சனையை ஏற்படுத்தி பார்த்தனர். இப்படி தொடர்ந்து பிரச்சனைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவே இன்று வழிப்பாட்டு தளம் மீது தாக்கி ஒத்திகை நடத்தி உள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் அவர்களுக்கு உள்ளது. இதனை பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கைக்கோர்த்து இந்த செயலை அறங்கேற்றி உள்ளது. இது வரை இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத அளவிற்கு காவல் துறை நல்ல ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாபெரும் போராட்டத்தில் ஈடுப்படும் என்றார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், நாகை தாஜ், மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், நகரத் தலைவர் சேக் முனைதீன், நகர செயலாளர் தீன் முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவாகோடை தர்காவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் தர்கா மற்றும் வீடுகள் சேதமாக்கப்பட்;டது. அதனை நேற்று சோசியல் டெமாக்ராடிக் பார்டி ஆப் இந்தியா கட்சியின்(எஸ்.டி.பி.ஐ) மாநில செயலாளர் அப்துல் சத்தார் பார்வையிட்டு. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:
நடந்து முடிந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கடந்த 31-ம் தேதி நள்ளிரவு ஓர் இளைஞர் கூட்டம், முத்துப்பேட்டைக்குள் புகுந்து மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இங்கிருக்கூடிய வழிப்பாட்டு தளத்தை சேதமாக்கி, அதன் மதில் சுவரை இடித்து அருகாமையில் உள்ள குடிசைகளையும் பிரித்து எரிந்து, அப்பாவி மக்களை அச்சுருத்தி ஒரு சிறுவர் என்று கூட பார்க்காமல் ஹலீல் ரஹ்மானை தாக்கி விட்டு சென்று இருக்கின்றார்கள். இது எதார்ச்சையாக நடந்த செயல் என்று நாம் எடுத்துக் கொள்ளமுடியாது. இது காலம் தொட்டு நடந்து வந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலே ஒரு திட்டமிட்ட செயல். ஒரு மத கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இது ஒரு ஒத்திகை என்று தான் அறிய வேண்டும். வழிப்பாட்டு தளத்தின் மேல் ஏரி அதன் விளக்குகளை தைரியமாக உடைத்துள்ளனர். இதற்கு முன்பு இந்த தர்காவின் பக்கத்தில் ஒரு கோவில் கட்ட வேண்டும் என பிரச்சனை செய்தனர். பின்னர் இதே பகுதியில் ஒரு சூழாயுதத்தை புதைத்து வைத்து இது கோவில் பகுதி என்ற பிரச்சனையை ஏற்படுத்தி பார்த்தனர். இப்படி தொடர்ந்து பிரச்சனைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தவே இன்று வழிப்பாட்டு தளம் மீது தாக்கி ஒத்திகை நடத்தி உள்ளனர். இதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம்தான் அவர்களுக்கு உள்ளது. இதனை பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கைக்கோர்த்து இந்த செயலை அறங்கேற்றி உள்ளது. இது வரை இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காத அளவிற்கு காவல் துறை நல்ல ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி மாபெரும் போராட்டத்தில் ஈடுப்படும் என்றார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் அபுபக்கர் சித்திக், நாகை தாஜ், மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், நகரத் தலைவர் சேக் முனைதீன், நகர செயலாளர் தீன் முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.