அதிரை அருகே உள்ள புதுப்பட்டினத்தில் மாவட்ட அளவிலான கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகள் கலந்துகொண்டு விளையாடினர்.
இதில் வாலிபால் போட்டிகளும் நடைபெற்றது. வாலிபால் இறுதி போட்டியில் அதிரை WSC அணியினரும், தஞ்சை SDAT அணியும் மோதினர். ஆட்ட இறுதியில் 21-9 பாய்ண்ட் கணக்கில் WSC அணியினர் முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
அதே போல் கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்று தொடரில் மூன்றாம் இடத்தை பெற்றனர்.
இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதன் பிறகு சான்றிதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்ற அணியினர் மாநில போட்டிகளில் பங்கு கொள்ள இருக்கின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
செய்யது இப்ராஹீம்
இதில் வாலிபால் போட்டிகளும் நடைபெற்றது. வாலிபால் இறுதி போட்டியில் அதிரை WSC அணியினரும், தஞ்சை SDAT அணியும் மோதினர். ஆட்ட இறுதியில் 21-9 பாய்ண்ட் கணக்கில் WSC அணியினர் முதல் இடத்தை பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
அதே போல் கால்பந்தாட்ட போட்டியும் நடைபெற்றது. இதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினரும், பட்டுக்கோட்டை அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்று தொடரில் மூன்றாம் இடத்தை பெற்றனர்.
இதையடுத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதன் பிறகு சான்றிதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற இந்த போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்ற அணியினர் மாநில போட்டிகளில் பங்கு கொள்ள இருக்கின்றனர்.
செய்தி மற்றும் படங்கள்:
செய்யது இப்ராஹீம்



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.