.

Pages

Friday, January 16, 2015

விபத்து நடந்தது எப்படி? பயணி இப்ராஹிம் பேட்டி !

அதிரையிலிருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. 23 பயணிகள் இருந்தனர்.இன்று அதிகாலை 4 மணி அளவில் பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூரை அடுத்த தண்டலம் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலை ஓர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. பஸ்சின் அடியில் சிக்கிய பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு தண்டலம் கிராம மக்களும், அவ்வழியே வாகனங்களில் சென்றவர்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து இருக்கைக்கு அடியில் சிக்கியவர்களை வெளியே கொண்டு வந்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பயணி அதிரை சேர்ந்த அப்துல் கறீம் (54) சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும், அதிரை சேர்ந்த சலீம், யாஸ்மின், முகமது அலி, ஹஜியம்மா உள்பட 11 பேர் படுகாயம் அடைந்தனர்.இதில் துரைப்பாக்கத்தை சேர்ந்த வினோதா உள்பட 2 பேரின் கால் துண்டாகி உள்ளது. அவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.காயம் அடைந்த அனைவரையும் சென்னை, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலும், கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.பலியான அப்துல் கறீம் பாலவாக்கத்தில் சொந்தமாக தண்ணீர் லாரி வைத்து தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. காயம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

விபத்து குறித்து பயணி இப்ராஹிம் கூறும் போது,
‘‘அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டு இருந்தோம். திடீரென ஆம்னி பஸ் பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.சீட்டுக்குள் சிக்கிய அனைவரும் பயத்தில் கூச்சலிட்டோம். கிராம மக்கள் விரைந்து வந்து மீட்டதால் பலர் உயிருடன் தப்பினோம்’’ என்றார்.

நன்றி: மாலைமலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.