அதிரை அடுத்துள்ள பத்துக்காடு கிராமத்தில் இஸ்லாமிக் அசோசியேஷன் சார்பில் மதரஸா மாணவ மாணவிகள் பங்கேற்ற மார்க்க அறிவுத்திறன் மற்றும் 4 ஆம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நேற்று 15-01-2015 வியாழக்கிழமை பத்துக்காடு ஜும்மா பள்ளி வாசல் வளாகத்தில் துவங்கியது.
நிகழ்ச்சிக்கு பத்துக்காடு ஜமாத் தலைவர் ஹாஜி எம். அஹமது ஹிதாயத்துல்லஹ் தலைமை வகிக்க, ஜமாத் நிர்வாகிகள் எஸ்ஏ.சேக்தாவூது, எம்ஏ சேக் அப்துல்லா, M.K.A.சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கிராஅத் ஏ. இஷாக் அகமது வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மல்லிபட்டினம் ஐக்கிய ஜமாத் தலைவர் தாஜுதீன், பத்துக்காடு ஜும்மா பள்ளி வாசல் இமாம் மௌலவி எம் நஸ்ருல்லா பைஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக வரவேற்புரை கரிசவயல் இஸ்லாமிக்
அசோசியேஷன் பொருளாளர் ஏ பரக்கத்துல்லா ஆற்றினர். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பத்துக்காடு ஜும்மா பள்ளி வாசல் இமாம் மௌலவி எம்.முஹம்மது முஹ்யித்தீன் பைஜி தொகுத்து வழங்கினர். முடச்சிக்காடு பள்ளி இமாம் மௌலவி ஏ. முகம்மது ஹசன் பைஜி மற்றும் அரசர் குளம் பள்ளி இமாம் பி. அப்துல் வாஹித் பைஜி ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர்.
இதையடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது. இவற்றை கரிசவயல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் ஏஎம்என்.அப்துல் ஷக்கூர் ரஹ்மானி வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் கரிசவயல் இஸ்லாமிக் அசோசியேசன் செயலாளர் கே. முகமது சுபைர் நன்றியுரை ஆற்றினார்.
Masha allah
ReplyDeleteஇவர்கள் தான் இலஞ் சமுதாய தூண்கள், அவர்களின் அறிவுத்திறனை அல்லாஹ் மேலும் மெருகூட்டுவானாக! ஆமின்.
ReplyDelete