அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதே போல் அதிரையை அடுத்து காணப்படும் கடற்கரையோர பகுதிகளாகிய மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கட்டுமாவாடி உள்ளிட்ட துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்களும் இப்பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்குள்ள மீன் வியாபாரிகள் மீன் கிடைக்காத காலகட்டங்களில் தொலை தூர பகுதிகளுக்கு குறிப்பாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மொத்தமாக மீன்களை வாங்கி வந்து விற்பதும் உண்டு.
தமிழர் பண்டிகை பொங்கல் தமிழகமெங்கும் நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு மீன் மார்கெட்டில் விற்பனைக்காக அதிகளவில் மீன்கள் வரத்துவங்கியது. இவற்றை அதிரை சுற்று வட்டார பகுதியினர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் மீன் மார்கெட் பகுதியில் வழக்கத்தை வீட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழர் பண்டிகை பொங்கல் தமிழகமெங்கும் நேற்று முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி அதிரையின் பிரதான மார்க்கெட்டாக கருதப்படுகிற கடைத்தெரு மீன் மார்கெட்டில் விற்பனைக்காக அதிகளவில் மீன்கள் வரத்துவங்கியது. இவற்றை அதிரை சுற்று வட்டார பகுதியினர் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் மீன் மார்கெட் பகுதியில் வழக்கத்தை வீட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






.jpg)










No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.