.

Pages

Friday, January 2, 2015

இஸ்லாமியராக மாறிய யுவன் சங்கர் ராஜா என்கிற அப்துல் காலிக் திருமணம் கீழக்கரையில் நடைபெற்றது !

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்று கொண்டார்.அப்துல் காலிக் என்று பெயரை மாற்றம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.தாயின் மரணத்திற்கு பிறகு மனமாற்றம் ஏற்பட்டதாகவும், தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார்.

அவ‌ருக்கு கீழக்கரையை சேர்ந்த பெண்னை திருமணம் முடிக்க நிச்சயம் நடைபெற்றதாகவும் டிசம்பரில் துபாயில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் இது குறித்து யுவன் சங்கர் என்ற அப்துல் காலிக் தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் யுவன் என்ற காலிக்கும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த சதக் நிசார் மகளான ஜப்ருன்னிஸாருக்கும் இன்று கீழக்கரையில் திருமணம் எனும் நிக்காஹ் நடைபெற்றது .

மணமகளின் உறவினருக்கு சொந்தமான தோட்டத்துடன் கூடிய பங்களாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணமகளின் உறவினர்கள் ஜமாத் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

யுவனின் திருணமத்தில் இளையராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர்.

5 comments:

  1. பா(B)ர(க்)கல்லாஹு ல(க்)க வபா(B)ர(க்) அலை(க்)க வஜமஅ பை(B)ன(க்)குமா பி(F)ல் கைர்

    ReplyDelete
  2. மாஷாஅல்லா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. மாஷாஅல்லா, வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  4. மார்க்கத்தில் எவ்வகையான நிர்ப்பந்தமுமில்லை வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும்( பிரிந்து )தெளிவாகி விட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்( யாவற்றையும் ) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

    நல்வாழ்த்துக்கள். அமைதி அன்பு நிலவட்டும்.

    ReplyDelete
  5. இவருக்கு இது மூன்றாவது திருமணம் என்பதினையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.