இந்நிலையில் தஞ்சை மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக திரு. ரவிச்சந்திரன் அவர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு அதிரை காவல்நிலையத்தில் திரு.ரவிசந்திரன் அவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பட்டுக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் ஜெகதிஸ்வரன், சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் செந்தில், பட்டுக்கோட்டை தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் அதிரை காவல்நிலைய துணை ஆய்வாளர்கள் பசுபதி, ஜீவானந்தம், சுந்தர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் போலீசார்கள் கலந்துகொண்டு திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக திரு. ரவிச்சந்திரன் அவர்கள் அதிரையில் காவல்துறை ஆய்வாளராக பணி செய்தபோது நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்தும் இவர் ஆற்றிய சேவை குறித்தும் எடுத்துரைத்தனர். இதன்பின்னர் ஏற்புரை வழங்கிய திரு. ரவிச்சந்திரன் அவர்கள் சிறந்த ஒத்துழைப்பை வழங்கிய அதிரை பொதுமக்கள், வர்த்தகர்கள், மீடியா நண்பர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்தார். மேலும் சிறந்த ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் வழங்கிய உயர் அதிகாரிகள், சக அதிகாரிகள், தனது பொறுப்பின் கீழ் இருக்கும் அனைத்து காவல்துறையினருக்கும் நன்றி கூறினார்.
அதிரையில் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் வகித்து வந்த பொறுப்பை இனி கூடுதலாக சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் செந்தில் கவனித்து வருவார் என கூறப்படுகிறது.
அதிரை நியூஸின் 'பிரதான செய்தியாளர்' இத்ரீஸ் மரைக்கா காவல்துறை ஆய்வாளர் திரு ரவிச்சந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்த வழியனுப்பிய போது எடுத்த படம்


.jpg)








Super IM அவர்களே
ReplyDelete