.

Pages

Wednesday, January 7, 2015

சொந்த பணத்தில் மரம் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் யாசின் !

உலகெங்கும் மரங்கள் அழிக்கப்பட்டு இயற்கை சுரண்டப்பட்டு வேட்டையாடபடுகிறது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இயற்கையை நேசித்து வாழ்வின் லட்சியமாக கொண்டு இயங்கி வருகின்றனர். இவர்களை போன்றவர்களால்தான் இன்னும் இயற்கை அழிவுக்குள்ளாகாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது. வறட்சியான மாவட்டமாக கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரையை சேர்ந்த வயதான ஒருவர் மரம் வளர்க்கும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். இது வரை இவர் 1000க்கும் மேற்பட்ட மரங்களை  உருவாக்கி உள்ளார். கீழக்கரை வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் யாசின்(70). இவர் பல ஆண்டுகளாக விறகு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். விறகு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தாலும் பல்வேறு சமூக பணியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வானம் பார்த்த பூமியான பகுகளில் மரம் நடுவதில் அதிக ஈடுபாடு உடையவராக இருந்து வருகிறார்.

கீழக்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வேம்பு, புங்கை, பன்னீர், வாகை சுமார் 1000க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரங்களை சாலையோரங்களில் வளர்த்துள்ளார். தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான மரக்கன்றுங்களை நட்டு பராமரிப்பு செய்து வருகிறார். இப்பகுதியில் மரங்கள் அழிக்கப்பட்டு பசுமை சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள சூழ்நிலையில் இவரின் மரம் வளர்ப்பு பணி இப்பகுதியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர் யாசின் கூறியதாவது: 
விற்பனைக்கு வரும் விறகுகளை கண்டு மிகவும் மன வேதனையடைந்தேன். இதற்கு மாற்றாக நாம் ஏதாவது செய்யவேண்டுமென்ற எண்ணத்தில் 10 வருடங்களுக்கு முன் மரக்கன்று நட தொடங்கினேன். பின்னர் அதுவே முழுநேர பணியாகி இப்போது நான் நட்ட கன்றுகள் 1000க்கும் மேற்பட்ட மரமாக வளர்ந்து நிற்கிறது. நாம் வாழும் காலத்தில் நாம் செய்யும் நல்ல பணிகள்தான் நம்மை நிம்மதியடைய செய்யும். பணம் தராத மன மகிழ்ச்சியை இந்த மரக்கன்று நடும் பணி தருகிறது. மனம் நிறைவாக இப்பணியை செய்து எனது வருமானத்தில் சுமார் 50 சதவீதத்தை இப்பணிகளுக்கு செலவிடுகிறேன் என்று தெரிவித்தார்.

இவரை போன்று நாமும் மரம் வளர்ப்போம்! இயற்கையை பேணி பாதுகாப்போம்!

நன்றி:தினகரன்

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    என்றைக்குமே முதிர்ந்ததுதான் பலன் தரும், அதுபோல் இந்த முதிர்ந்த ‎வயதிலும் இவர் செய்யும் இந்தக் காரியம் மகத்தானது, இவரைபோல் ‎முதிர்ந்தது எத்தனையோ !!!!!!!!!!!???????????????‎

    இருந்தாலும் முதிர்ந்ததுக்கு தோதாக முதிர்ந்த எண்ணங்கள் ‎இல்லாததினால் நடக்கவேண்டிய நல்ல காரியங்கள் தடைபட்டு ‎போய்விடுகின்றன.‎

    நாமும் முயற்சி செய்வோம். ‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.