சுத்தம் என்று சொன்னால், அது நீர்
விட்டு கழுவினால்தான் சுத்தமாக இருக்கும், அதை மீண்டும் வெளியில் எடுக்கும்போது
சுத்தமாக இருக்குதா என்று நன்றாக பார்த்துவிட்டு வெளியில் கொடுக்க வேண்டும்.
இதுதான் முறை.
கடந்த 17/01/2015-சனிக்கிழமை அன்று அதிகாலை
2.00-மணிக்கு என் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த முஹம்மது கமால் காக்கா அவர்கள்
காலமாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்) இந்த மரண செய்தியை நமதூர் வலை தளங்களிலும் பதியப்பட்டு இருந்தது.
சரி, இப்போ விஷயத்துக்கு
வருகின்றேன்.
மரணம் சம்பவித்த
வீட்டுக்கு, துக்கம் விசாரிக்க வருகிறவர்கள் அமருவதற்காக நாற்காலிகளை வாடகைக்கு
எடுப்பது வழக்கம், அதுபோல் மையித்தை அடக்கம் செய்வதற்கு மையவாடிவரை எடுத்துச்
செல்ல சந்தூக் என்னும் ஒரு பெட்டி வேண்டும், இதுவெல்லாம் பள்ளியில் இருந்தோ அல்லது பொது நல அமைப்பில் இருந்தோ வருவது
வழக்கம்.
இந்த
வீட்டுக்கும் அப்படித்தான் நாற்காலிகளும் சந்தூக் என்னும் பெட்டியும் வந்தது. ஆனால்,
நாற்காலிகள் அனைத்தும் அசுத்தமாக இருந்தது, வந்தவர்கள் அமருவதற்கு முகத்தை
சுழித்தார்கள், நாங்கள் சிலபேர் அதை சுத்தம் செய்து கொடுத்தோம்.
மையித்தை மையவாடிக்கு
எடுத்துச் செல்ல வந்த சந்தூக்கும் கடுமையாக தூசிகளோடு புழுதிகள் அடைந்து அசுத்தமாக
காணப்பட்டது. அதன் மேல் போர்த்தும் பச்சை நிறத்தில் உள்ள போர்வையும் நிறம்
தெரியாமல் புழுதிகள் படிந்து காணப்பட்டது. அதையும் நாங்கள் சுத்தம் செய்து, பின்பு
அதில் மையித்தை வைத்து மையவாடிக்கு எடுத்துச் சென்றோம்.
ஏன் இந்த அவல நிலை?
இஸ்லாம்
சுத்தத்தைப் பற்றி வெகுவாக எச்சரித்துள்ளதே! அப்படி இருந்தும் ஒரு சம்பவம், ஒரு நிகழ்ச்சி,
பல பேர் கூடும் இடம், போன்றவைகளுக்கு வாடகைக்கு கொடுத்தாலும் சரி, வாடகை இல்லாமல்
கொடுத்தாலும் சரி, அதை தூய்மைப்படுத்தி கொடுத்தால் தான் என்ன?
ஏன் இந்த அவல நிலை.
நாலுபேர்
கூடும் இடம் மஜ்லிஸ் என்று சொல்லுகின்றோமே, இறந்தவர் உடலை (மையித்தை) கண்ணியத்துடனும்
மரியாதைஉடனும் எடுத்துச் சென்று அடக்கம் பண்ணனும் என்று இருக்கின்றதே, இப்படி விதி
இருந்தும் இதுதான் கண்ணியமா? இதுதான் மரியாதையா?
இந்த
விஷங்களில் கவனம் செலுத்தி, இனி வரும் காலங்களில் தூமையாக கொடுக்க முயற்சி
செய்யுங்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ.
(மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.