.

Pages

Monday, January 19, 2015

ஹஜரத் நலம் பெற துஆ செய்வோம் !

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1984 ம் ஆண்டு முதல் 2008 ம் ஆண்டு வரை 24 ஆண்டுகள் 'நீதி போதனையை' கற்பிக்கும் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் என்.எஸ் ஜமால் முஹம்மது ( வயது 74 ). 'ஹஜரத்' என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர். முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி அருகே தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 04-01-2015 அன்று ஹஜரத்தை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஹஜரத்தின் இல்லத்திற்கு சென்ற நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் இவரது உடல் நிலையை அறிந்து வேதனை அடைந்தனர்.

இதையடுத்து ஹஜரத் குறித்து 'தோள் கொடுப்போம் நம்ம ஹஜரத்துக்கு !' என்ற தலைப்பில் அதிரை நியூசில் செய்தி பதிவிட்டப்பட்டது. இவற்றை பார்வையிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வசிக்கும் இவரது பாசமிகு மாணவர்கள் பலர் ஹஜரத்துக்கு உதவ முன்வந்தனர். ஹஜ்ரத்தை நேரடியாக முத்துப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து மருத்துவ உதவிகளை வழங்கினர்.

துபாய், சவூதி, சென்னை, அதிரை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இவரது பாசமிகு மாணவர்கள் மற்றும் இவரது நல விரும்பிகள் நேரடியாகவும், ஹஜரத்தின் வங்கி கணக்கு வழியாகவும், ஒரு சிலர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் மூலமாகவும் நிதி உதவியை வழங்கினார்கள். இதில் கடந்த அன்று நிலவரப்படி மொத்தம்  ₹ 94,500/- வந்துள்ளதாக ஹஜரத் நம்மிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இவருக்கு இருதயம் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

2 comments:

  1. நீதி போதனை போதித்த நம்ம ஹஜரத் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வள்ள அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.