இந்நிலையில் நெசவுத்தெரு ஜமாத்தார்கள் கடந்த [ 07-08-2015 ] அன்று மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் மேற்கு பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சும் இடத்தில் ) புதிதாக பள்ளிவாசல் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது
இதன் தொடர்ச்சியாக கடந்த [ 02-09-2015 ] அன்று நெசவுத்தெரு மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்கூட்டம் மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் நடைபெற்றது. இதில் புதிதாக கட்ட உள்ள பள்ளிவாசலுக்கு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' என்ற பெயர் சூட்டுவது என முடிவு செய்தனர். மேலும் கட்டுமான பணிக்கு புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று மாலை மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் கட்டுமான பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலமா பெருமக்கள், நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
மாஷா அல்லாஹ்! பள்ளிவாசல்கள் கூடினால், பரக்கத்துகள் பெருகும். தொழுகையாளிகள் கூடினால், தொல்லைகள் தீரும். சங்கத்தில் ஒற்றுமை நிலவட்டும்!
ReplyDeleteதீமையை கலைந்து ஒன்றிணைந்து செயல்படுகின்ற வலிமை அல்லா நமக்கு நாடுவராக ...... ஆமீன்
ReplyDeleteஅன்புடன்
அதிரை நெசவு தெரு அமைப்பு அமீரகம்
தீமையை கலைந்து ஒன்றிணைந்து செயல்படுகின்ற வலிமை அல்லா நமக்கு நாடுவராக ...... ஆமீன்
ReplyDeleteஅன்புடன்
அதிரை நெசவு தெரு அமைப்பு அமீரகம்
masha allah
ReplyDelete