.

Pages

Friday, January 22, 2016

நெசவுத்தெரு 'மஸ்ஜீது-ல்-ஹூதா' புதிய பள்ளிவாசல் கட்டுமான பணி துவக்க விழா !

நெசவுத்தெரு மஹல்லாவில் புதிதாக பள்ளிவாசல் கட்ட வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாக அப்பகுதியினரிடையே இருந்து வந்தது. இதற்கான முயற்சியில் அப்பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அவ்வபோது ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நெசவுத்தெரு ஜமாத்தார்கள் கடந்த [ 07-08-2015 ] அன்று மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் ஒன்றுகூடி இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டனர். கூட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் மஹல்லாவாசிகளின் பங்களிப்போடு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தின் மேற்கு பகுதியில் ( நோன்பு கஞ்சி காய்ச்சும் இடத்தில் ) புதிதாக பள்ளிவாசல் கட்டி எழுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது

இதன் தொடர்ச்சியாக கடந்த [ 02-09-2015 ] அன்று நெசவுத்தெரு மஹல்லாவாசிகளின் ஆலோசனைக்கூட்டம் மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத்தில் நடைபெற்றது. இதில் புதிதாக கட்ட உள்ள பள்ளிவாசலுக்கு 'மஸ்ஜீது-ல்-ஹுதா' என்ற பெயர் சூட்டுவது என முடிவு செய்தனர். மேலும் கட்டுமான பணிக்கு புதிதாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை மஸ்ஜீது-ல்-ஹுதா' பள்ளிவாசல் கட்டுமான பணி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உலமா பெருமக்கள், நெசவுத்தெரு மாஆதினுள் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்க பொறுப்பாளர்கள் மற்றும் மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

4 comments:

  1. மாஷா அல்லாஹ்! பள்ளிவாசல்கள் கூடினால், பரக்கத்துகள் பெருகும். தொழுகையாளிகள் கூடினால், தொல்லைகள் தீரும். சங்கத்தில் ஒற்றுமை நிலவட்டும்!

    ReplyDelete
  2. தீமையை கலைந்து ஒன்றிணைந்து செயல்படுகின்ற வலிமை அல்லா நமக்கு நாடுவராக ...... ஆமீன்

    அன்புடன்
    அதிரை நெசவு தெரு அமைப்பு அமீரகம்

    ReplyDelete
  3. தீமையை கலைந்து ஒன்றிணைந்து செயல்படுகின்ற வலிமை அல்லா நமக்கு நாடுவராக ...... ஆமீன்

    அன்புடன்
    அதிரை நெசவு தெரு அமைப்பு அமீரகம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.