இதையொட்டி அதிரையின் பிரதான 5 இடங்களில் தெருமுனை பிரசாரங்கள் நடந்தது. மேலத்தெரு, செக்கடி மேடு, கிராணி கடை முக்கம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, அதிரை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் நடந்தது. இதில் தமுமுக மாநில செயலாளர் பழனி பாஃருக் அவர்கள் 'கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஏன் ?' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் தமுமுக - மமக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக கோரிக்கை ஆர்பாட்டம் குறித்து துண்டு பிரசுரங்கள் அதிரையின் வர்த்தகர்கள், பொதுமக்களுக்கு நேரடியாக சென்று விநியோகிக்கப்பட்டன. இந்த பணியை தமுமுக - மமக மாணவரணி பொறுப்பாளர் செய்தனர். மேலும் அதிரை நகர தமுமுக - மமக சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்ட நிகழ்வு குறித்து அதிரை சுற்று வட்டார பகுதி அனைத்து சமய பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் துண்டு பிரசுரங்கள், வால் போஸ்டர், ஆட்டோ ஒலிபெருக்கி அழைப்பு உள்ளிட்டவை செய்து வருகின்றனர்.
தமிழக சிறையில்; ஆயுள் கைதிகளை விடுவிக்க போராட்டமா? ஆட்சியில் அங்கம் வகித்திருக்கொண்டிருக்கும் போது இப்போ திடீரென போராட்டம் மக்களை வியப்படைசைகிறது . தேர்தல் நேரம் நெருங்குவதால் இதனை கையில் எடுக்கிறார்கள் ஆட்சியில் இடம் கிடைத்தாலும் கிடைக்கவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு அமைதியாக இருப்பார்கள். எல்லாத்துக்கும் காரணம் பதவி தான் வேறென்ன!
ReplyDeleteசமுதாயத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தாலோ அல்லது குண்டாசில் கைது பண்ணினாலோ எந்த அமைப்பும் போராட்டம் நடத்தாது என்னவென்று விசாரிக்காது மாறாக தேர்தலில் சீட்டுக்காக மாவட்டத்தில் போராட்டம் ... அதற்கான பன்முனை பிரசாரம் இதனால் சிறையில் உள்ளவர்களுக்கு பலன் இல்லை.
இந்திய பிரதமரை கொன்ற தீவிரவாதி அமைப்பில் கைதானவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றும் பொழுது போராட்டமும் காணோம்: அவர்கள் கைதிகளுக்காக இரண்டு மட்ட நீதிமன்றங்களில் அயராது வாதாடிக்கொண்டிருக்கும் பொழுது.... சிறையில் நம் சமுதாய மக்கள் ... நம் சமுதாய மக்கள் என்று தெருமுனை பிரச்சாரத்தால் ஒன்றும் பலன் கிடைக்கப் போவதில்லை... குறிப்பு :சீட்டு அதிகமாக கேட்டு வாங்கவும்.