.

Pages

Tuesday, February 2, 2016

அதிரையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி உறுப்பினர்கள் கூட்டம் அதிரை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள செல்லியம்மன் சமுதாயக் கூடத்தில் இன்று காலை நடந்தது.

கூட்டத்திற்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது தலைமை வகித்தார். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, துணை சேர்மன் இர்பான் சேக், மான் ஏ சேக், ஏ. ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட பொருளாளர் எஸ். முத்துகுமார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணை சேர்மன் ஜெயக்குமார். மாவட்ட செயலாளர் சேக் நாசர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம் சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர்  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை புதிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி பட்டுக்கோட்டை கிளை சேர்மன் சுவாமிநாதன்  மதுக்கூர் கிளை சேர்மன் வழக்கறிஞர் கோவிந்தராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு வெள்ள நிவராணப்பொருட்கள், 56 குருதிக்கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதிதாக இணைந்த ஆயுட்கால உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இவற்றை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம்,  இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட பொருளாளர் எஸ். முத்துகுமார், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட துணை சேர்மன் ஜெயக்குமார். மாவட்ட செயலாளர் சேக் நாசர், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் செயலாளர் எம்.நிஜாமுதீன், நிர்வாக கமிட்டி உறுப்பினர் சி. சார்லஸ் மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கினார்கள்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் கிளை கெளரவ ஆலோசகர், காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார்.

முன்னதாக கடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களிடமிருந்து கோட்டை அமீர் விருது பெற்ற எம்.பி அபூபக்கர் அவர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தஞ்சை மாவட்ட சேர்மன் எஸ். ராஜமாணிக்கம்  மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது  ஆகியோர் விழா மேடையில் பொன்னாடை போர்த்தி கெளரவித்தனர்.

முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி  நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஆறுமுகச்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி முடிவில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி நிர்வாக கமிட்டி உறுப்பினர் எம். அஹமது அன்சாரி நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், துணை தலைவர் என்.பிச்சை, திமுக நகர செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், அதிரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 

 
 
 
 
 
 
 
 


3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    நேரடி அழைப்பு இருந்தும் வரமுடியாமைக்கு வருந்துகின்றேன், என்னை தம்பி இத்ரீஸ் அவர்கள் வலுக்கட்டாயமாக கூப்பிட்டார்கள், நானும் வருவேன் என்று வாக்கு கொடுத்தேன.

    ஆனால், சில தவிர்க்க முடியாத சூழ்நிலையினால், என்னால் கலந்து கொள்ள முடிய வில்லை.

    இருந்தாலும், பாராட்டி வாழ்த்துவதில் மிகிழ்கின்றேன்.

    K.M.A. Jamal Mohamed.
    President – PKT Taluk.
    National Consumer Protection Service Centre.
    State Executive Member
    Adirampattinam-614701.

    ReplyDelete
  2. சகோதரர் கோ. மு. ஜமால் அவர்களுடன் நானும் சேர்ந்து கொள்ளவேண்டும். நேரில் அழைத்தும் வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
    மிகச் சிறப்பாக இந்த விழா நடைபெற்று இருப்பதை பதிவு செய்யப்பட்டுள்ள படங்கள் பறை சாற்றுகின்றன.
    தொண்டுள்ளம் படைத்த பல நண்பர்கள் கல்வியாளர்கள் இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு எனது பாராட்டுக்கள்.

    இதேபோன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் அதிரையின் பெயர் நல்ல காரியங்களுக்கு அதிரை என்று அறியப்படும். இதனால் ஊருக்குப் பல நல்ல விஷயங்களைக் கொண்டுவர இன்ஷா அல்லாஹ் உதவலாம்.

    மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் இத்ரீஸ் மறைக்கா அவர்களின் ஈடுபாட்டுடன் கூடிய பணிகளுக்கு பாராட்டுக்கள்.

    புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.