.

Pages

Tuesday, February 2, 2016

அதிரை ஈசிஆர் சாலையில் மாட்டுவண்டி மீது லாரி மோதி விவசாயி பலி !

அதிராம்பட்டினம் அருகே மலவேனிற்காடு பகுதியை சேர்ந்தவர்கள் பழனிவேல் (வயது 55), சாமிகண்ணு (60). விவசாய கூலி வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் வைக்கோல் போர் வாங்குவதற்காக இன்று அதுகாலை மாட்டுவண்டியை எடுத்துக்கொண்டு சென்றனர்.

சாமிகண்ணு வண்டியை ஓட்டிசென்றார். பழனிவேல் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதேவழியாக மாட்டு வண்டியின் பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிவந்த மாட்டிவண்டியின் மீது வேகமாக மோதியது.

இதில் மாட்டு வண்டியின் பின்னால் அமர்ந்து வந்த பழனிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். வண்டியை ஓட்டி சென்ற சாமிகண்ணு படுகாயம் அடைந்தார். வண்டியை இழுத்து சென்ற 2 மாடுகளில் ஒருமாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. மற்றொரு மாடுக்கு கால்கள் முறிந்தது.

இதுகுறித்து போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் படுகாயம் அடைந்த சாமிகண்னை தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இறந்த பழனிவேலின் உடலை அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து இறந்த மாடையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காயமடைந்த மாட்டை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து அந்த லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.