.

Pages

Tuesday, February 2, 2016

பட்டுக்கோட்டை அருகே கார்-டிப்பர் லாரி மோதல்:மணமக்கள் உள்பட 8 பேர் காயம்!

பட்டுக்கோட்டை வளவன்புரம் தெருவைச் சேர்ந்த ஜின்னாவுக்கும் (35), மதுக்கூரைச் சேர்ந்த வகிதாபேகத்துக்கும் (28) திங்கள்கிழமை காலை மதுக்கூர் மணமகள் வீட்டில் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் விருந்து முடிந்து பிற்பகல் 3 மணிக்கு மணமக்கள் உறவினர்களுடன் பட்டுக்கோட்டையில் உள்ள மணமகன் வீட்டுக்கு காரில் சென்றனர்.

பட்டுக்கோட்டையை அடுத்த ஆத்திக்கோட்டை நசுவினி ஆற்றுப்பாலம் அருகே இவர்கள் கார் மீது எதிரே ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் மணமகன் ஜின்னா, மணமகள் வகிதாபேகம், உறவினர்கள் மூர்னிஷா (55), அப்துல் நசீர் (41), ரசியாபேகம் (32), சல்மா (50), ஆதின் (4), ரகுமான் (35) ஆகிய 8 பேர் காயமடைந்தனர்.

இதில் மணமகன் ஜின்னா உள்பட 7 பேர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் மணமகள் வகிதாபேகம் இடது கால் நசுங்கி பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில், பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

நன்றி: தினமணி
Image credit: madukkurexpress

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.