.

Pages

Thursday, February 18, 2016

பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிரை பாருக் மனு தாக்கல் !

அதிரையை சேர்ந்தவர் ஏ. பாருக் ( வயது 60 ). கடந்த 1991 ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர். தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர செயலாளர் பொறுப்பில் உள்ளார். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திருவாரூர் - காரைக்குடி வரையிலான அகல ரயில் பாதை திட்டம் மற்றும் பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் ரயில் பாதை பணிகளின் திட்டம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை கடிதங்கள் மூலம் ரயில்வே அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார். அதே போல் பொருளாதரம் தொடர்பான ஆலோசனைகளையும் கடிதங்கள் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பி வருகிறார்.

மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் இவர் தொடர்ந்து இந்திய பொருளாதாரம் மற்றும் அரசியல் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு கட்டுரைகளை இணையதளங்களில் எழுதி வருகிறார்.

இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரின் விருப்ப மனுக்கள் பெறுவது காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர செயலாளர் அதிரை பாருக் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர துணை செயலாளர் கட்டபொம்மன் உடனிருந்தார்.

5 comments:

  1. Nallamuyarchche
    anaseat....no
    valka valamudan.

    ReplyDelete
  2. நம்ம ஊரிலிருந்து ஒருவர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்ததை நினைத்து சந்தோசம். பட்டுகோட்டை தொகுதி வேட்பாளரை வெற்றி நிர்ணயிக்கும் ஊரு அதிரை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் குறைந்த ஜாதிமக்கள் உள்ள வேட்பாளர் தான் வெற்றி பெறுகிறார். இப்போ இயற்க்கை கூட்டணியான திமுக - காங்கிரஸ் இருப்பதால் ஜனாப் பாருக் அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருதலாம். நம்மக்கள் இவரைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ என்று தெரிய வில்லை. சமுதாய நலன் கருதி ஒரு தடவை எல்லோரும் ஆதரவு கொடுத்தால் நம்முடைய ஒற்றுமை பலன் மற்ற ஊரு மக்களுக்கும் தெரியும். அரசியலை கட்சிதமாக கணிக்கும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க அதிரையர்கள் முன்வரவேண்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்புள்ள தம்பி மஸ்தான் கனி ! இருக்கும் அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி அதிரையைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளித்தால் அவரை எதிர்த்து இன்னொருவர் போட்டியிடாமல் அனைவரும் ஒற்றுமையாக கட்சி, இயக்க வேறுபாடுகளை மறந்து வாக்களிப்பார்களா? அப்படிப்பட்ட பரந்த மனப்பான்மை வந்தால் பாராட்டலாம். இது கனவா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.