ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக லஞ்சம், பத்திரம் மற்றும் பட்டா பெற லஞ்சம், கட்டிடம் கட்ட அனுமதி பெறுவதற்காக லஞ்சம், அரசுக்கு சேர வேண்டிய வரி வகைகளை கட்ட அனுமதி பெற லஞ்சம், காவலர்களுக்கு லஞ்சம், நகராட்சி ஆணையருக்கு லஞ்சம், தாசில்தாருக்கு லஞ்சம், அரசுப்பணியில் சேருவதற்கு லஞ்சம், புதிய மின் இணைப்பு பெற லஞ்சம், வருமான வரி அதிகாரிக்கு லஞ்சம் எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம்….
இன்றைய கால கட்டத்தில் எந்த அரசுத் துறையும் “நாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை” என்று சொல்ல முடியுமா?. அனைத்து துறையிலும் லஞ்சம் என்பது நீக்கமற நிறைந்துள்ளது. அரசாங்க இயந்திரத்தை இயக்கும் அதிகாரிகலாயினும் சரி, அரசியல் வாதிகலாயினும் சரி தன்னுடைய கடமையை மறந்து லஞ்சம் வாங்கும் ஒன்றையே குறியாக கொண்டுள்ளனர்.
லஞ்சம் வாங்குபவர்களிடம் “ஏன் லஞ்சம் வாங்குகின்றீகள் என்று கேட்டால்”? நாங்கள் எங்களுக்காகவா வாங்குகின்றோம், நாங்கள் வாங்குவதெல்லாம் அரசியல் வாதிகளுக்காகவும், அரசு உயர் அதிகாரிகளுக்காகவும் வாங்குகின்றோம் என்றும், நாங்கள் வேலைக்கு சேரும் போது லஞ்சம் கொடுத்துதான் வேலைக்கு சேர்ந்தோம் என்றும் கூறுகின்றனர்.
லஞ்சம் கொடுப்பவர்களிடம் கேட்டால், “முன் கை நீண்டால் தானே முழங்கை நீளுகின்றது”, என்றும் “காசு கொடுத்தால் தானே காரியம் நடக்கின்றது” என்றும், கூறுகின்றனர். காரியம் சீக்கிரம் நடக்க வேண்டும் என்பதற்காகவும், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை குறைத்து செலுத்த வேண்டும் என்பதற்காகவும், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், லஞ்சம் கொடுக்க மக்களும் தயாராக உள்ளனர். அதிலும் வெளிநாட்டில் வேலை செய்யக் கூடியவர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
“நான், இந்த தேசத்தை நேசிக்கிறேன்; எனது கடமையை செய்ய, ஒருபோதும் லஞ்சம் வாங்கமாட்டேன் ‘என, வெளிப்படையாக அறிவித்து, கண்ணியத்துடன் கடமையாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழக்கூடிய நல்ல அதிகாரிகளும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். இது போன்றோர் “லஞ்சம் வாங்குவது போன்ற ஈனச் செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் பழி சுமத்துவது நியாயமல்ல…’ என, குமுறுகின்றனர்.
அரசு அலுவலகத்தில், லஞ்சம் கேட்டாலும், கொடுக்க மாட்டேன் என்ற உறுதியுடன் மக்களும் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
அரசு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால், பணிகள் தரமாகவும், நேர்மையாகவும் இருக்கும். நாட்டின் வளர்ச்சியும் ஆரோக்கியமாக இருக்கும். அரசு பணிக்கு வருவோர், “எந்த சூழ்நிலையிலும் லஞ்சம் வாங்க மாட்டேன்,’ என்ற உறுதியுடன் இருக்க வேண்டும்.
ஒருபக்கம் அரசு அலுவலகத்தில் லஞ்ச ஊழல் தடுப்பு உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடக்குது அதாவது ஊழலை அறவே ஒழித்திட, நாம் வாழ்வில் இடையுறாது முயல்வோம் எனவும் உறுதி சொல்லும்நேரத்தில் சர்வதேச லஞ்ச ஊழல் தடுப்பு தினத்தன்று கூட அரசு அதிகாரிகள் சிக்குவதை காணமுடிகிறது. உயர் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் சிக்குபவர்களை விசாரிக்க அரசிடம் அனுமதி லஞ்ச துறை தடுப்பு அலுவலகம் அனுமதி பெற வேண்டும் இப்போ அதனை தளர்த்தி கடைநிலை ஊழியர்களை கூட விசாரிக்க அரசிடம் அனுமதிப் பெற்ற பின் தான் விசாரிக்க வேண்டும் என்று சட்டம் சமீபத்தில் வந்ததே. இனி இவர்களை யாரு தடுப்பா ?? சரி விடுங்க. நான் லஞ்சம் கொடுத்தேன் என்று பகிரங்கமாக சொல்ல முடிகிறதா? அப்படிப்பட்டவர்களின் அனுபவத்தை இங்கே பகிரலாமே. சில இடங்களில் வீடு கட்ட அனுமதிப் பெற 25000 கொடுக்கிறார்கள் இதற்க்கு அதிரை பரவாயில்லை; அஞ்சுக்கோட்டையில் எவ்வளவு?
ReplyDelete