சவூதி அரேபியா, செப்.03
காய்ச்சல், சோர்வு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மயங்கிய சுமார் 170 வயதான ஹஜ் யாத்ரீகர்கள் உடனுக்குடன் முதலுதவி அளிக்கப்பட்டனர். மேலும் சிவில் டிபன்ஸ் மற்றும் சவுதி செம்பிறைச் சங்க உதவியுடன் அருகிலுள்ள சுகாதார மையங்களில் சேர்க்கப்பட்டனர். வெயிலாலும் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையின் போது நெரிசல் காணப்பட்டதாலும் இவ்வாறு அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
புனித கஃபா வளாகத்திலும் நுழைவு வாயில்களிலும் தவாப் சுற்றும் பகுதியிலும் பாதிக்கப்படுபவர்களுக்கு உடனுக்குடன் உதவ தேவையான அவசர கால உதவிக்குழுக்களும் மருந்துவ உபகரணங்களும் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் புதிதாக மோட்டர் பைக் மருத்துவ உதவிக்குழுக்களும் ஹரம் ஷரீஃபை சுற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்



No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.