அதிரை நியூஸ்:
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 31
புனித மதினா நகரின் கவர்னர் இளவரசர் பைசல் பின் சல்மான் அவர்கள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஆலோசணைக்குப் பின் இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் உதவுவதையே முக்கிய இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, மதினா வழியாக ஹஜ் செய்யவரும் யாத்ரீகர்கள் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் ஹஜ் கடமையை நிறைவேற்றிடும் வகையில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மதினா விமான நிலையத்திலுள்ள 90 கவுன்டர்களிலும் 24 மணிநேரமும் அலுவலர்கள் பணியாற்றுவர் என்றும், ஹஜ் யாத்ரீகர்களின் ஆவணங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர் என்றும் போலியான ஆவணங்கள் மூலம் உள்நுழைபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் சில மோசடிக் கும்பல் உங்களுக்கு பதிலாக நாங்கள் ஹஜ் செய்கிறோம், அதற்கான கட்டணம் 4500 ரியால்கள் என்று விளம்பரம் செய்து ஏமாற்றி வருகின்றனர். இந்த பிராடு பேர்வழிகளிடம் சிக்கி பொருளாதாரத்தை இழப்பதுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத இந்த செயலால் ஹஜ்ஜின் நன்மையையும் இழக்க நேரிடுவதோடு பாவத்தையும் சம்பாதிக்க நேரிடும் என இஸ்லாமிய அறிஞர்களும் அரசும் எச்சரித்துள்ளது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
சவூதி அரேபியா, ஆகஸ்ட் 31
புனித மதினா நகரின் கவர்னர் இளவரசர் பைசல் பின் சல்மான் அவர்கள் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஆலோசணைக்குப் பின் இஸ்லாத்திற்கும் முஸ்லீம்களுக்கும் உதவுவதையே முக்கிய இலக்காக கொண்டுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, மதினா வழியாக ஹஜ் செய்யவரும் யாத்ரீகர்கள் பாதுகாப்பாகவும் இலகுவாகவும் ஹஜ் கடமையை நிறைவேற்றிடும் வகையில் தேவையான உதவிகள் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மதினா விமான நிலையத்திலுள்ள 90 கவுன்டர்களிலும் 24 மணிநேரமும் அலுவலர்கள் பணியாற்றுவர் என்றும், ஹஜ் யாத்ரீகர்களின் ஆவணங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவர் என்றும் போலியான ஆவணங்கள் மூலம் உள்நுழைபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் சில மோசடிக் கும்பல் உங்களுக்கு பதிலாக நாங்கள் ஹஜ் செய்கிறோம், அதற்கான கட்டணம் 4500 ரியால்கள் என்று விளம்பரம் செய்து ஏமாற்றி வருகின்றனர். இந்த பிராடு பேர்வழிகளிடம் சிக்கி பொருளாதாரத்தை இழப்பதுடன் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத இந்த செயலால் ஹஜ்ஜின் நன்மையையும் இழக்க நேரிடுவதோடு பாவத்தையும் சம்பாதிக்க நேரிடும் என இஸ்லாமிய அறிஞர்களும் அரசும் எச்சரித்துள்ளது.
Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.