.

Pages

Friday, September 23, 2016

குறைந்த சம்பளமே பலரின் மன அழுத்தத்திற்கு காரணம் - ஆய்வு முடிவுகள் !

அதிரை நியூஸ்:
துபாய், செப்-23
சமீபத்தில் அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளில் (MENA - Middle East and Northern Africa countries) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 69.1 சதவிகிதம் பேர் அதாவது சராசரியாக 10க்கு 7 பேர் குறைவான சம்பளத்தால் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர்.

அதற்கு அடுத்து 'தனிப்பட்ட நிதி நிலைமை' மன அழுத்தத்திற்குள் தள்ளுவதாக தெரிவித்துள்ளனர், இவர்கள் சுய தொழில் செய்வோராக அல்லது வாங்கும் சம்பளத்தை வீணடிப்போராக இருக்கலாம்.(வரவு எட்டணா செலவு பத்தனா கேஸ்)

இவர்களுக்கு அடுத்தே வேலைப்பளு மற்றும் சொந்தக் கவலைகள் மன அழுத்தத்தின் காரணிகளாக அமைந்துள்ளன.

இதுபோன்ற மன அழுத்த நோயின் வெளிப்பாடால் குடும்பம், நண்பர்கள், வேலை மற்றும் உடல் ஆரோக்கியங்கள் பாதிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

1 comment:

  1. சரியான சிந்தனையின்மை.....
    முடிவு தம்மிடமே உள்ளது...
    இறை நம்பிக்கை ..இறை வணக்கம் ..தீர்வு...

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.