.

Pages

Saturday, October 1, 2016

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட முடிவு: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் !

மதுக்கூர், அக்-01
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மதுக்கூர் பள்ளிவாசல் தெரு  எம்.எஸ்.ஏ மஹாலில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜி பி.எஸ் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதின், மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்க மாவட்ட நிர்வாகம் வழங்குவது என்றும், வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்கள் ஏ.எம் ஜபருல்லா, உம்மல் பரிதா ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இவர்களின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்யப்பட்டன.

தொடக்கத்தில் கட்சியின் மதுக்கூர் பேரூர் தலைவர் இத்ரீஸ் வரவேற்றார்.முடிவில் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதின் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஏ. அப்துல் முனாப், சேக் அப்துல்லா, ஜமால் முஹம்மது, மணிச்சுடர் சாகுல் ஹமீது, அபூ பக்கர், அப்துல் காதர், பஷீர், பாருக் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
 

2 comments:

  1. முஸ்லிம் லீக், கருணாநிதி இதயத்தில் மட்டும் இடம் இருந்தால் போதும் என்ற பெருந்தன்மை கொண்டதல்லவா! அதனால் இந்த முடிவு

    ReplyDelete
  2. முஸ்லிம் லீக், கருணாநிதி இதயத்தில் மட்டும் இடம் இருந்தால் போதும் என்ற பெருந்தன்மை கொண்டதல்லவா! அதனால் இந்த முடிவு

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.