இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மதுக்கூர் பள்ளிவாசல் தெரு எம்.எஸ்.ஏ மஹாலில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜி பி.எஸ் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதின், மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்க மாவட்ட நிர்வாகம் வழங்குவது என்றும், வரும் உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உறுப்பினர்கள் ஏ.எம் ஜபருல்லா, உம்மல் பரிதா ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இவர்களின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்தனை செய்யப்பட்டன.
தொடக்கத்தில் கட்சியின் மதுக்கூர் பேரூர் தலைவர் இத்ரீஸ் வரவேற்றார்.முடிவில் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆபிதின் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஏ. அப்துல் முனாப், சேக் அப்துல்லா, ஜமால் முஹம்மது, மணிச்சுடர் சாகுல் ஹமீது, அபூ பக்கர், அப்துல் காதர், பஷீர், பாருக் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
முஸ்லிம் லீக், கருணாநிதி இதயத்தில் மட்டும் இடம் இருந்தால் போதும் என்ற பெருந்தன்மை கொண்டதல்லவா! அதனால் இந்த முடிவு
ReplyDeleteமுஸ்லிம் லீக், கருணாநிதி இதயத்தில் மட்டும் இடம் இருந்தால் போதும் என்ற பெருந்தன்மை கொண்டதல்லவா! அதனால் இந்த முடிவு
ReplyDelete