.

Pages

Monday, October 17, 2016

இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-17
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சிக்கு பள்ளி இயக்குனர் டி.வி ரேவதி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஏ. மீனா குமாரி, பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி, சத்தியசீலன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்காட்சியை காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர். ஜி.ஏ செய்யது தமீம், முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா, துணை செயலர் எம்.எஃப் முஹம்மது சலீம், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

கண்காட்சியில் கல்வி, அறிவியல், ஆரோக்கியம், மொழி, பொதுஅறிவு, நீதிக்கதைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்பின் கீழ் 15000 புத்தகங்கள் இடம் பெற்றன. இதில் 7300 புத்தகங்கள் விற்பனையாகின. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
 
 

1 comment:

  1. புத்தகக் கண்காட்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.
    இமாம் ஷாஃபி பள்ளி நமதூரில் நடத்தியதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், எத்தனை உள்ளூர்வாசிகள் அதைக்கொண்டு பயனடைந்தார்கள் என்பது தெரியவில்லை. காரணம், வெறும் புத்தகங்களும் ஆசிரிய-ஆசிரியைகளும் மட்டுமே நிற்பது புகைப்படங்கள் மூலம் தெரிகின்றது. இதை முறையாகப் பள்ளி நிர்வாகம் நடத்தியிருக்கலாம். யாருடைய நிர்வாகத்தில் பள்ளி இயங்குகின்றது என்ற கேள்வி எழுவதால், இந்த எண்ணப் பிரதிபலிப்பை இங்கே பதிகின்றேன்.

    வாசிப்பை நேசிப்பவர்களைச் சென்றடைய வேண்டிய இந்த நிகழ்வு, வெறுமனே ஒரு காட்சியாக மட்டும் சிலர் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது!

    உள்ளூர் பதிப்பகத்தார்களான பஷாரத் பதிப்பகம், சலாமத் பதிப்பகம், திரீஎம் பதிப்பகம், தாஹா சாரின் கைரியத் பதிப்பகம், அதிரைப் பதிப்பகம் ஆகியோரும் பங்குபற்றும் விதத்தில், அவர்களுக்கும் அழைப்புக் கொடுத்திருக்கலாம்.

    இனி வரும் காலத்திலாவது, பள்ளி நிர்வாகம் இதைக் கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.