தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் புத்தகக் கண்காட்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு பள்ளி இயக்குனர் டி.வி ரேவதி தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஏ. மீனா குமாரி, பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி, சத்தியசீலன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் கல்வி, அறிவியல், ஆரோக்கியம், மொழி, பொதுஅறிவு, நீதிக்கதைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தலைவர்கள் வரலாறு உள்ளிட்ட பல்வேறு தலைப்பின் கீழ் 15000 புத்தகங்கள் இடம் பெற்றன. இதில் 7300 புத்தகங்கள் விற்பனையாகின. இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
புத்தகக் கண்காட்சிகள் வரவேற்கப்பட வேண்டியவை.
ReplyDeleteஇமாம் ஷாஃபி பள்ளி நமதூரில் நடத்தியதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால், எத்தனை உள்ளூர்வாசிகள் அதைக்கொண்டு பயனடைந்தார்கள் என்பது தெரியவில்லை. காரணம், வெறும் புத்தகங்களும் ஆசிரிய-ஆசிரியைகளும் மட்டுமே நிற்பது புகைப்படங்கள் மூலம் தெரிகின்றது. இதை முறையாகப் பள்ளி நிர்வாகம் நடத்தியிருக்கலாம். யாருடைய நிர்வாகத்தில் பள்ளி இயங்குகின்றது என்ற கேள்வி எழுவதால், இந்த எண்ணப் பிரதிபலிப்பை இங்கே பதிகின்றேன்.
வாசிப்பை நேசிப்பவர்களைச் சென்றடைய வேண்டிய இந்த நிகழ்வு, வெறுமனே ஒரு காட்சியாக மட்டும் சிலர் முன்னிலையில் நடந்து முடிந்துள்ளது!
உள்ளூர் பதிப்பகத்தார்களான பஷாரத் பதிப்பகம், சலாமத் பதிப்பகம், திரீஎம் பதிப்பகம், தாஹா சாரின் கைரியத் பதிப்பகம், அதிரைப் பதிப்பகம் ஆகியோரும் பங்குபற்றும் விதத்தில், அவர்களுக்கும் அழைப்புக் கொடுத்திருக்கலாம்.
இனி வரும் காலத்திலாவது, பள்ளி நிர்வாகம் இதைக் கவனத்தில் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாமா?