அதிராம்பட்டினம், அக்-16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை பள்ளி இயக்குனர் ரேவதி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் மீனா குமாரி, பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி, சத்தியசீலன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இதில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான 129 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.
கண்காட்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர். ஜி.ஏ செய்யது தமீம், முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா ஆகியோர் நடுவர்களாக இருந்து 25 மாணவ, மாணவிகளின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். பள்ளி சார்பில் இவர்களுக்கு பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் இடம் பெற்று இருந்த சிமெண்ட் தயாரிப்பின் நவீன தொழில்நுட்பம், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இயற்கைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருட்களும் மாதிரிகளில் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலர் எம்.எஃப் முஹம்மது சலீம், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அறிவியல் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை பள்ளி இயக்குனர் ரேவதி தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் மீனா குமாரி, பள்ளி ஆசிரியர்கள் பார்த்தசாரதி, சத்தியசீலன், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இதில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான 129 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.
கண்காட்சிக்கு காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர் முனைவர். ஜி.ஏ செய்யது தமீம், முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஓ.கே.எம் சிபஹத்துல்லா ஆகியோர் நடுவர்களாக இருந்து 25 மாணவ, மாணவிகளின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். பள்ளி சார்பில் இவர்களுக்கு பரிசு, பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டன.
கண்காட்சியில் இடம் பெற்று இருந்த சிமெண்ட் தயாரிப்பின் நவீன தொழில்நுட்பம், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இயற்கைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருட்களும் மாதிரிகளில் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கண்காட்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக துணை செயலர் எம்.எஃப் முஹம்மது சலீம், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.