.

Pages

Monday, January 2, 2017

துபாயில் மூடுபனியால் விமான போக்குவரத்து கடும் பாதிப்பு !

அதிரை நியூஸ்: துபாய், ஜன-02
துபாயில் நிலவும் கடும் மூடுபனியால் தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்களின் வருகை தாமதமாகின மேலும் பல விமான புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

நேற்று ( ஞாயிற்றுக்கிழமை ) பகல் வரை முழு அமீரகத்தையும் பனி போர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது, இன்றும் அதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலை போக்குவரத்தும் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி, துபைக்கு வரவேண்டிய 28 விமானங்கள் தாமதமாக வருகின்றன, இவை இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஓமன் மற்றும் குவைத்திலிருந்து வரவேண்டிய விமானங்கள். மேலும், பிளைதுபையின் 9 விமான புறப்பாடுகள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன, நேற்று மட்டும் 21 விமான சேவைகளை பிளைதுபை ரத்து செய்திருந்தது.

ஓவ்வொரு ஆண்டும் ஆங்கில வருடப் பிறப்பின் முதல் வாரம் எப்பொழுதுமே துபை வரும் பயணிகளால் விமான நிலையங்கள் பரபரப்பாக காணப்படும் நிலையில் விமான ரத்துக்கள் பயணிகளுக்கும் விமான சேவை நிறுவனங்களுக்கும் பல இடர்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன என்றாலும் துபை சர்வதேச விமான நிலையங்கள் வழியாக ஜனவரியின் முதல் 3 நாட்களுக்குள் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.