காரைக்குடி ~ திருவாரூர் இடையேயான, 147 கி.மீ., துார மீட்டர் கேஜ் பாதையில், காரைக்குடி முதல் பட்டுக்கோட்டை வரையிலான 73 கிலோ மீட்டர் பாதையில் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 2 ந் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை வாரம் (திங்கட்கிழமை, வியாழக்கிழமை) இருமுறை இயக்கப்பட்டு வருகின்றன. அதன் எஞ்சிய பகுதியான, பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
பட்டுக்கோட்டை ~ அதிராம்பட்டினம் ~ முத்துப்பேட்டை செல்லும் பாதையில் தற்காலிக தண்டவாளங்கள் அமைக்கப்பட்டது. இதன் பின்னர், இப்பாதையில் கடந்த ஜூன் 23 ந் தேதி தென்னக ரயில்வே சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு முதன்மை பொறியாளர் காளிமுத்து டிராலியில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார்.
பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம் வழியாக திருத்துறைப்பூண்டி வரையிலான சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக, பள்ளிக்கொண்டான் முதல் அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான பாதையில் டெல்லியிலிருந்து சரக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட 260 மீட்டர் நீளமுள்ள நிரந்தரத் தண்டவாளங்களை ரயில் பாதையில் இறக்கி வைக்கும் பணிகள் கடந்த ஜூலை 12 ந் தேதி தொடங்கியது.
இதன் பின்னர், 2-வது கட்டமாக, அதிராம்பட்டினம் ரயில் நிலையம் முதல் தம்பிக்கோட்டை பகுதி வரை சுமார் 8 கிலோ மீட்டர் பாதையில் நிரந்தரத் தண்டவாளங்கள் இறக்கி வைக்கும் பணி கடந்த ஜூலை 20 ந் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், 3-வது கட்டமாக, தம்பிக்கோட்டை முதல் முத்துப்பேட்டை செல்லும் பாதை வரையில் நிரந்தரத் தண்டவாளங்கள் இறக்கி வைக்கும் பணி நேற்று (ஆக.03) வெள்ளிக்கிழமை நடந்து முடிந்தன. இதில், சரக்கு ரயிலில் ஒரு வரிசையில் 12 தண்டவாளங்கள் என மொத்தம் 5 அடுக்குகளில் வைக்கப்பட்டு இருக்கும் புதிய தண்டவாளங்கள் ரயில் பாதையில் இறக்கி வைக்கப்பட்டன. இப்பாதையில் ஏற்கனவே தற்காலிகமாக பொருத்தப்பட்டு உள்ள தண்டவாளங்களை அகற்றிவிட்டு, நிரந்தரத் தண்டவாளங்கள் பொருத்தப்பட உள்ளது.
இதில், காரைக்குடி ~ திருவாரூர் வழித்தடத்தில் அமைந்துள்ள அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் கட்டுமானப்பணியின் தற்போதைய நிலவரம் பற்றிய செய்தி துளிகள்...
1. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தின் 80 சதவித கட்டுமானப்பணிகள் தற்போது முடிந்துள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து பணிகளும் வரும் செப்டம்பர் 15 க்குள் நிறைவு பெற உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
2. பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் ரயில் நிலையம் வரையிலான ரயில்வே பாதையில் சிக்னல் கேபிள் புதைக்கும் பணி தற்போது நடந்து வருகின்றன.
3. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றில் தளங்கள் அமைக்க காங்கிரட் சிமெண்ட் தட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் தளம் அமைக்கும் பணிகள் தொடங்கி விடும்.
4. அதிராம்பட்டினம் நிலையம் அருகே கடலுக்கு செல்லும் சாலை, ஏரிப்புறக்கரை ரயில்வே சாலை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை பிலால் நகர் ரயில்வே பாதை ஆகியவற்றில் கேட் கீப்பர் அறைகள் மற்றும் கேட் அமைக்கும் பணியின் கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.
5. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் டிக்கட் கவுண்டர் அறை, நுழைவாயில் வளாகம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.
6. அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில், பிளாட் பார்ம்-1 ல் மேற்கூரை அமைக்கும் பணிக்காக தூண்கள் மற்றும் பர்லின் ஷெல்டர் பொருத்தும் பணிகள் கிரேன் இயந்திரம் உதவியோடு நடந்து முடிந்துள்ளது. இதன் மேல் பகுதியில் சீட் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதன் பின்னர், 2-வது கட்டமாக, நடைமேடை-1, நடைமேடை-2 ஆகியவற்றை இணைக்கும் மேல் படிக்கட்டு நடைமேடை அமைக்கப்பட உள்ளது.
7. அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ரயில்வே பாதையில் லாரிகள் மூலம் ஜல்லிகள் நிரப்பட்டு வருகின்றன.
8. அதிரை ரயில் நிலையத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகளை சென்னை மண்டல கட்டுமானப் பிரிவு துணை முதன்மை பொறியாளர் சாம்சங் விஜயகுமார், கட்டுமானப் பிரிவு உதவி நிர்வாக பொறியாளர்கள் பி. செல்வம், பூபதி ஆகியோர் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர்.
எம்.நிஜாமுதீன் (சேக்கனா நிஜாம்)
ஏ.சாகுல் ஹமீது
ரயில்வே நுழைவாயில் முதல் கடற்கரை தெரு ,ஹாஜாநகர் வழியாக ECR சாலையை கடக்கும் ரயில்வே சாலு யை ஒரு விளக்கமும் இல்லையே
ReplyDelete