.

Pages

Monday, December 23, 2019

23 ஆண்டுகளுக்கு பின் காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!

அதிராம்பட்டினம், டிச.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில், 23 ஆண்டுகளுக்கு முன்பு கணினி அறிவியல் பாடம் பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடந்த 1993-96 ஆம் ஆண்டு காதிர் முகைதீன் கல்லூரி கணினி அறிவியல் பாடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் தற்போது சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, துபை, சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.

முன்னாள் மாணவர்கள் 62 பேரும், கடந்த ஆண்டு வாட்ஸ் அப் குழுமம் ஒன்றை ஏற்படுத்தி, அதில், கல்வி கற்றுக்கொடுத்த பேராசிரியர்களையும் இணைத்தனர். இக்குழுமத்தை, வெறும் குட்மார்னிங், குட்நைட் போன்ற பல்சுவைச் செய்திகளின் பொழுதுபோக்கு பகிர்தலுக்காக மட்டும் பயன்படுத்தாமல், ஒருவருக்கொருவர் உதவும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (டிச.22) ஞாயிற்றுக்கிழமை மாலை இவர்கள், தாங்கள் கல்வி பயின்ற கல்லூரி வளாகத்தில் சந்தித்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதுடன் பழைய அனுபவங்களை பேசி மகிழ்ந்தனர். தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இதில், அனைவரும் வெள்ளை கலரில் கைலி அணிந்து வந்து, கல்லூரி முன்பாக செல்பி எடுத்துக்கொண்டனர்.

இதில், கல்லூரி முன்னாள் மாணவர்கள் எம்.என் அகமது சலீம், எம்.நிஜாமுதீன், ஹித்ரு முகைதீன், சகாபுதீன், பாசின் என்கிற பசிர் அலி, பஜல் முகமது, அன்வர்தீன், முகமது பாருக், ஜபருல் ஹசன், விஜயகுமார் மற்றும் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.