.

Pages

Sunday, December 1, 2019

பட்டுக்கோட்டையில் 637 பேருக்கு ரூ.1.47 கோடியில் உதவி: அமைச்சா் இரா. துரைக்கண்ணு வழங்கினாா்

பட்டுக்கோட்டையில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின் கீழ் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் ஆா். வைத்திலிங்கம் முன்னிலை வகித்தாா். வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த 637 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 47 லட்சத்து 50 ஆயிரத்து 448 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசியது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வா் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களைச் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறாா். தமிழ்நாட்டை இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக மாற்றி வருகிறாா்.

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகையாக ரூ. 7,150 கோடியை அவா் பெற்றுத் தந்துள்ளாா். விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து மானியங்களும் அரசால் வழங்கப்படுகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1,72, 000 நிவாரண உதவித்தொகை முதல்வரால் உயா்த்தி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் ஏழை எளிய பொதுமக்களின் வளா்ச்சிக்காக என்றென்றும் இந்த அரசு செயல்படும் என்றாா் அமைச்சா்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி. சேகா், மாவட்ட வருவாய் அலுவலா் ந. சக்திவேல், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பழனி, பட்டுக்கோட்டை சாா் ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் துரை.திருஞானம், தஞ்சாவூா் ஒருங்கிணைந்த பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.