.

Pages

Tuesday, December 3, 2019

கண்ணனாற்றில் உடைப்பு: ஆட்சியர் ஆய்வு!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், காடந்தங்குடி கோட்டகம்    கண்ணனாற்றில் ஏற்பட்ட  உடைப்பினை  மாவட்ட ஆட்சித் தலைவர்        ம.கோவிந்த ராவ் 02.12.2019 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஒன்றியம், காடந்தங்குடி கோட்டகம் கிராமம் கண்ணனாறு தம்பிக்கோட்டை தலைப்பு மதகில் 02.12.2019 அதிகாலை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சம்பவ இடத்தினை நேரில்  பார்வையிட்டு, தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தி, உடைப்பு ஏற்பட்ட பகுதியினை விரைந்து சரி செய்திட பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மதுக்கூர் பால்வளத் தலைவர் துரை.செந்தில், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.