அதிராம்பட்டினம், டிச.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக யாசகம் பெற்று வந்தவர் தேவி (வயது 54). இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதிரையில் இயற்கை எய்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், நெய்னா முகமது, ஆரிப், ஹசன் உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தானாக முன்வந்து காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர் அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வண்டிப்பேட்டை இடுகாட்டிற்கு உடல் எடுத்துச்சென்று இன்று திங்கட்கிழமை காலை நல்லடக்கம் செய்தனர். இஸ்லாமிய இளைஞர்களின் தன்னலமற்ற செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக யாசகம் பெற்று வந்தவர் தேவி (வயது 54). இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதிரையில் இயற்கை எய்தினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், நெய்னா முகமது, ஆரிப், ஹசன் உள்ளிட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தானாக முன்வந்து காவல்துறை, கிராம நிர்வாக அலுவலர் அனுமதி பெற்று, தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வண்டிப்பேட்டை இடுகாட்டிற்கு உடல் எடுத்துச்சென்று இன்று திங்கட்கிழமை காலை நல்லடக்கம் செய்தனர். இஸ்லாமிய இளைஞர்களின் தன்னலமற்ற செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.