.

Pages

Friday, December 6, 2019

PFI தஞ்சை தெற்கு, திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவராக அதிரை ஏ.ஹாஜா அலாவுதீன் தேர்வு!

அதிராம்பட்டினம், டிச.05
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் மாவட்ட செயற்குழு கூட்டம், அவ்வமைப்பின் மதுக்கூர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர், அவ்வமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.முஹம்மது ரசின் முன்னிலையில், தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவராக அதிரை ஏ. ஹாஜா அலாவுதீன், மாவட்டச் செயலாளராக முத்துப்பேட்டை இ.கே.என் மர்ஜூக் அகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள் ஆகும். நிறைவில், ஏ. ஹாஜா அலாவுதீன் ஏற்புரை வழங்கினார். இக்கூட்டத்தில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.