.

Pages

Thursday, December 19, 2019

அதிராம்பட்டினத்தில் பிரமாண்ட பேரணி ~ ஆர்ப்பாட்டம்: 4 ஆயிரம் பேர் பங்கேற்பு (நேரடி ரிப்போர்ட்)

அதிராம்பட்டினம், டிச.19
அதிராம்பட்டினம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில், தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரி மத்திய அரசையும், அவற்றை ஆதரித்த மாநில அரசையும் கண்டித்து அதிராம்பட்டினத்தில் கடைகள் அடைப்பு போராட்டம், வாடகை ஆட்டோ, கார், வேன் வாகனங்கள் வேலை நிறுத்தம், பிரமாண்ட பேரணி, ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், இஸ்லாமிய அமைப்புகள், கிராம பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாயத்தினர் பங்கேற்ற பிரமாண்ட பேரணி, தக்வா பள்ளிவாசல் அருகில் இருந்து புறப்பட்டு, ஜாவியா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது.

பின்னர், சிறப்பு அழைப்பாளர்களாக, மவ்லவி எம்.எஸ். அப்துல் ஹாதி முப்தி, மவ்லவி தேங்கை சரபுதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, என்.காளிதாஸ், மவ்லவி சபியுல்லாஹ் அன்வாரி, இராம.குணசேகரன், ஏ.ஜெ ஜியாவுதீன், எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், ஏ.அபுபக்கர் சித்திக், கோவை செய்யது ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து முழக்கமிட்டனர். நிறைவில் எம்.சாகுல் ஹமீது நன்றி கூறினார்.

போராட்டத்திற்கு, அதிராம்பட்டினம் வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்து, அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, பெரிய கடைத்தெரு மார்க்கெட், ஜாவியா சாலை, ஆஸ்பத்திரி தெரு, வண்டிப்பேட்டை, ஈஸ்ட் கோஸ்ட் சாலை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், அதிராம்பட்டினம் கார், வேன், ஆட்டோ வாகனங்கள் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.




 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.