.

Pages

Saturday, December 21, 2019

M.S.M நகர் ஜமாத்தார் நிறுத்திய 2-வது வார்டு வேட்பாளருக்கு ஆதரவு: எஸ்.அஸ்ரப் அலி போட்டியில் விலகல்!

அதிராம்பட்டினம், டிச.21
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏரிப்புறக்கரை கிராம ஊராட்சி உள்ளாட்சி தேர்தல், எதிர்வரும் (30-12-2019) அன்று நடைபெற உள்ளது. இதில், எம்.எஸ்.எம் நகர், கே.எஸ்.ஏ லேன், பிலால் நகர் ஒரு பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய 2-வது வார்டில் வேட்பாளராக போட்டியிடுவதற்கு எஸ். அஸ்ரப் அலி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

மேலும், எம்.எஸ்.எம் நகர் ஜமாத்தார் ஆதரவுடன் அதே வார்டில் போட்டியிட அப்பகுதியை சேர்ந்த எஸ். முகமது தமீம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இருவரின் மனுக்களும் தேர்தல் நடத்தும் உதவி அலுவலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், எம்.எஸ்.எம் நகர் ஜமாத்தாரின் கோரிக்கையை ஏற்று, அஸ்ரப் அலி, 2-வது வார்டின் உறுப்பினர் தேர்வு போட்டியிலிருந்து விலகிக்கொண்டு, முகமது தமீமுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகவும், அவரது வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவதாகவும் தெரிவித்துக்கொண்டார்.

சமூக ஒற்றுமை கருதி போட்டியிலிருந்து விலகிக்கொண்ட அஸ்ரப் அலிக்கு, எம்.எஸ்.எம் நகர் ஜமாத்தார்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

மேலும், ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு சுயேட்சை வேட்பாளராக 'கை உருளை' சின்னத்தில் போட்டியிடும், அதிரை அமீன் என்கிற முகமது அமீன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு எம்.எஸ்.எம் நகர் ஜமாத்தார்கள் உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.